ஓர் ஊரில் பேராசைக்கார இடையன் ஒருவன் இருந்தான்.அவன் பணத்தைச் செலவழிக்காமல் மந்தைகளைப் பெருக்க வேண்டும் என்று எண்ணினான் . அதற்காக ஒரு திட்டமும் தீட்டினான்,
ஒரு நாள் காட்டிற்குச் சென்று ஓநாய்க் குட்டி ஒன்றைப் பிடித்து வந்தான்.அந்த ஓநாய்க் குட்டிக்கு, மற்றவர்களின் மந்தைக் கூட்டத்திற்குள் புகுந்து ஆடுகளைத் திருடிக் கொண்டுவர கடுமையான பயிற்சியளித்தான்.
நன்றாகக் களவு வித்தையைக் கற்றுக் கொண்ட ஓநாய்குட்டி பக்கத்து மந்தைக் கூட்டத்திலிருந்து இரவு வேளைகளில் இரண்டு, மூன்று ஆடுகளைக் திருடிக் கொண்டுவரும்.
பத்திரமாக ஆடுகளை ஒப்படைக்கும் ஓநாய்க்குட்டிக்கு தினமும் ஒவ்வொரு ஆட்டை உணவாகக் கொடுப்பான்.
பேராசைக்கார இடையனிடம் பணம் செலவு செய்யாமல் மந்தைக் கூட்டம் பெருகிக் கொண்டே வந்தது.அவனுக்கு எல்லையில்லாத மகிழ்ச்சிஏற்பட்டது.
பேராசைக்கார இடையனிடம் மந்தைக் கூட்டம் பெருகிய அதேவேளை,பக்கத்து மந்தைகளில் ஆடுகள் குறைந்து கொண்டே வந்தன, இதனால் பக்கத்து மந்தைக்காரர்கள் தங்கள் மந்தைக் கூட்டத்திற்கு பலத்த காவல் போட்டனர்.
பக்கத்து மந்தைக் கூட்டத்திற்கு பலத்த காவல் போடப்பட்டதால் ஓநாய்க் குட்டியால் முன்புபோல ஆடுகளைத் திருடமுடியவில்லை,ஆடுகளை ஓநாய் திருடிக் கொண்டுவராததால் ஓநாய்க்கு தினமும் உணவாகக் கிடைக்கும் ஆடும் கிடைப்பதில்லை.
பசி பொறுக்க முடியாத ஓநாய், பேராசைக்கார இடையனின் மந்தைக் கூட்டத்தில் இருந்து ஆடுகளைத் திருடித் தின்ன ஆரம்பித்தது.
தன் மந்தையில் உள்ள ஆடுகள் குறைந்து வருவதைப் பேராசைக்கார இடையன் கவனித்தான்.ஒரு நாள் .ஒநாய்க்குட்டி அவன் மந்தையில் உள்ள ஆட்டை அடித்துத் தின்பதைப் பார்த்துவிட்டான்.
உடனே கோபம் கொண்டு ஒரு தடியை எடுத்துக்கொண்டு ஓநாய்க்குட்டியை அடிக்க ஓடினான். தன்னை இடையன் அடிக்க வருவதைப் பார்த்த ஓநாய் அவனிடம், "பேராசைக்காரா! நீதானே இந்தவித்தையைக் கற்பித்தாய்? உனது மந்தையில் உள்ள ஆடுகளைத் திருடும் போது உனக்கு இவ்வளவு கோபம் வருகிறதே? மற்றவர்களின் ஆடுகளைத் திருடும்போது, அவர்கள் மனது எவ்வள்வு வேதனைப்படும் என்று உனக்குத் தெரியமா?"
No comments:
Post a Comment