அண்ணன் தங்கை இருவருக்கும் எப்போதும் சண்டை தான். அண்ணன் பரத் மகா குறும்பன். இரண்டாம் வகுப்பில் படிக்கின்றான். தங்கை நந்தினி இன்னும் பள்ளிக்கு செல்லவில்லை.சின்னப் பெண். தாய் தந்தை இருவரும் பணி புரிகின்றார்கள். அப்பத்தாவும் தாத்தாவும் இவர்களுடன் இருக்கிறார்கள். பரத் , நந்தினி குடும்பம் இருப்பது ஒரு அடுக்குமாடி குடியிருப்பில். அந்த குடியிருப்பில் மொத்தம் 5 மாடி. மூன்றாவது மாடியில் இவர்கள் குடியிருக்கின்றார்கள்.
ஒரு சனிக்கிழமை காலை அப்பாவும் அம்மாவும் பணிக்கு சென்றபின்னர் பரத்தும் நந்தினியும் விளையாடிக் கொண்டு இருந்தனர். தாத்தா வெளியே தன் நண்பர்களைக் காண கிளம்பினார்
"பரத் தங்கையை சீண்டாமல் விளையாடு. சண்டை போட்டுக்க கூடாது சரியா? தாத்தா சீக்கிரம் வந்துவிடுகின்றேன்"
"சரிங்க தாத்தா" - இருவரும்.
விளையாட்டு சாமான்கள் எடுத்துக்கொண்டு இருவரும் மொட்டைமாடியில் விளையாடச் சென்றனர். நிழலாக இருந்த ஓரத்தில் விளையாடினர்.எந்த பொருள் பரத் எடுத்தாலும் உடனே நந்தினி அது வேண்டும் என்பாள். அப்போது திடீர் என்று பரத் "உஷ் உஷ்" என்று கத்தியபடி ஓடினான்.
"அண்ணா என்ன ஆச்சு?" பயத்துடன் அண்ணன் சட்டைக்கு பின்னால் ஒளிந்து கொண்டாள்..
"ஒரு பருந்து வந்தது பார்த்தியா?"
"இல்லையே"
"பெரிய பருந்து"
''அச்சோ அப்புறம்?. ஏன் விரட்டிக்கொண்டு ஓடினீர்கள்?"
"அழக்கூடாது சரியா. அந்த பருந்து உன் மூக்கை கடிச்சி எடுத்துக்கொண்டு போய் விட்டது. அது தான் துரத்திக்கொண்டு சென்றேன். அதற்குள் பறந்தே போய்விட்டது"..
இவன் சொல்லி முடிப்பதற்குள் நந்தினி அழ ஆரம்பித்துவிட்டாள்.."அம்மா என் மூக்கு..என் மூக்கு" என்று அழுதபடி படிக்கட்டுகளில் இறங்கி தன் வீட்டிற்கு சென்றாள். அவள் விட்ட சத்தத்திற்கு அந்த கட்டிடத்தில் உள்ள அனைவருமே பயந்துவிட்டனர். யார் என்ன சொல்லியும் அழுகை நின்ற பாடில்லை. அப்பத்தா அதெல்லாம் ஒன்றும் இல்லை.அண்ணன் விளையாடுகிறான் என்றாள். கேட்கவே இல்லையே. அழுதபடியே இருந்தாள்.கை கால் உதைத்தாள்.
தாத்தா அந்த சமயம் வீட்டிற்குள் வந்தார். "என்னாச்சு பாப்பாக்கு? ஏன் என் தங்கம் அழுகின்றது?"
தன் அழுகையை நிறுத்தி "தாத்தா, நானும் அண்ணனும் விளையாடிக் கொண்டு இருந்தோம்.ஒரு பெரிய பருந்து கறுப்பு நிறத்தில் வந்தது. என் மூக்கை..." மீண்டும் அழுகை...
"அழாமல் சொன்னால் தானே புரியும்..."
"என் மூக்கை கடிச்சி எடுத்துக்கொண்டு போய்விட்டது..ம்ம்ம்..ம்ம்ம்"
நிலைமையை புரிந்து கொண்டார் தாத்தா. "ஓ உன் மூக்கு தானா அது? " என்றார்.
அமைதியானாள் நந்தினி. "நான் தெருவில் வந்த போது ஒரு பருந்து வந்து என்னிடம் பேசியது.ஒரு அழகான குட்டி பெண்ணின் மூக்கை எடுத்துக்கொண்டு வந்துவிட்டேன். பாவம் அவள் நல்ல பெண், சமத்து பெண், என்று சொல்லிவிட்டு மூக்கை என்னிடம் கொடுத்து விட்டு பறந்து சென்றது."
"இதோ பத்திரமாக என் பாக்கெட்டில் வைத்திருக்கிறேன்.எங்கே கிட்டவா..கண்ணை மூடிக்கொள்.."
பாக்கெட்டில் இருந்து ஏதோ எடுப்பது போல் பாவனை செய்து அவள் முகத்தில் வைத்து அழுத்தினார்.
"ஆகா. மூக்கு ஒட்டியாச்சே..போய் கண்ணாடியில் பார்." நந்தினி கண்ணாடியை நோக்கி ஓடினாள்.."படவா..குழந்தையை ஏன் இப்படி ஏமாற்றுகிறாய்" என்று செல்லமாக பரத் கன்னத்தை கிள்ளினார் தாத்தா..
"ஹைய்யா மூக்கு வந்துடுச்சே..ஜாலி..ஜாலி..அண்ணா மூக்கு வந்துடுச்சு...ஜாலி ஜாலி..." மீண்டும் மாடிக்கு சென்று விளையாட துவங்கினர் ஆனந்தமாக.
Saturday, December 18, 2010
Friday, December 17, 2010
பட்டாணி
ஒரு நாள் ஒரு மூதாட்டி மண் அடுப்பில் வைத்து சமையல் செய்து கொண்டிருந்தாள். அவள் அடுப்பில் வைத்திருந்த தண்ணீர் கொதித்ததால் அதற்குள் சில காய்கறிகளை போட்டாள். அப்போது பட்டாணி அந்தப் சட்டியிலிருந்து வெளியே குதித்து வந்து, "என்னை வேக வைக்கவேண்டாம். என்னை சமைக்கவேண்டாம்'' என்று கத்தியது.
"மூதாட்டியோ நீ மரியாதையாக பழையபடி சட்டிக்குள் போகிறாயா? இல்லை உன்னை நசுக்கட்டுமா?'' என்றாள்.
ஆனால் மூதாட்டியின் உத்தரவை பட்டாணி கேட்கவில்லை. அங்கிருந்து வேகமாக ஓட்டம் பிடித்தது. அப்போது "நில் நில் ஓடாதே' உன்னுடன் நானும் வருகிறேன்'' என்று இன்னொரு குரல் கேட்டது. பட்டாணி திரும்பிப் பார்த்தது, அப்படிக் கத்தியது என்று சொன்னது எரிந்து கொண்டிருந்த ஒரு துண்டு நிலக்கரி.
"அடுப்பிற்குள் இருந்தால் எனக்கு மூச்சு முட்டுகிறது. அதனால் நானும் உன்னுடன் வெளியுலகைப் பார்க்க வருகிறேன்'' என்றது, நிலக்கரி.
"என்ன வெளியுலகைப் பார்க்கப் போகிறாயா?. அப்படியென்றால் என்னையும் உங்களுடன் அழைத்துச் செல்லுங்கள்''. என்றது கீழே கிடந்த வைக்கோல் ஒன்று.
"சரி, வா போகலாம்'' என்று நிலக்கரியும் பட்டாணியும்? வைக்கோலை தங்களுடன் கூட்டு சேர்த்துக் கொண்டன.
மூன்றும் சேர்ந்து நடந்தபோது சாலையின் ஓரிடத்தில் விரிசல் விட்டிருந்தது. அந்த இடத்தில் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது.
"இனி நாம் தொடர்ந்து செல்ல முடியாது. அதனால் நான் அடுப்பிற்கே போய் விடுகிறேன்'' என்றது, நிலக்கரி.
"அப்படியென்றால் நானும் அடுப்பில் எரியும் சட்டிக்குள் போய் விடுவேன்'' என்றது பட்டாணி.
"நண்பர்களே சோர்ந்து விடாதீர்கள். நான் இந்த பாலத்திற்கு (விரிசல்) இணைப்பாக இருக்கிறேன். நீங்கள் இருவரும் என்மீது ஏறி நடந்து மறுபக்கம் போய்விடலாம்'' என்று நம்பிக்கைïட்டியது, வைக்கோல்.
முதலில் பட்டாணி, வைக்கோல் மீது ஏறி விரிசலின் மறுபக்கத்தை அடைந்தது. ஆனால் எரிந்து கொண்டிருந்த நிலக்கரி, வைக்கோல் மீது ஏறியதும் அது தீப்பிடித்துக் கொண்டது. இதனால் இரண்டும் சேர்ந்து தண்ணீருக்குள் விழுந்தன.
"ஷ்..ஷ்..ஷ்...''தன் மீது எரிந்து கொண்டிருந்த நெருப்பு அணைந்ததும் நிலக்கரி பெருமூச்சு விட்டது.
அந்த வினோத சத்தத்தைக் கேட்ட பட்டாணி சிரிக்க ஆரம்பித்தது. தொடர்ந்து அது பலமாகச் சிரித்ததால் வெடித்து சிதறி அதிலிருந்த ஒவ்வொரு பட்டாணியும் ஓட ஆரம்பித்தன.
அந்தப் பட்டாணிகள் அனைத்தும் ஒரு தையல்கடையை நோக்கிச் சென்றன. தையல்காரரிடம் தயவு செய்து எங்களை ஒன்றாக வைத்து தைத்து விடுங்கள் என்று கேட்டுக் கொண்டன.
தையல்காரரும் பட்டாணிகளின் வேண்டுகோளை ஏற்று ஒரு தடித்த நூல் கொண்டு தைத்து விட்டார்.
இதனால் தான் அன்று முதல் பட்டாணியை நாம் உரிப்பதற்கு அதன் மேல் தோலில் நூல் போல் உள்ள பகுதியை உரிக்கவேண்டியிருக்கிறது.
"மூதாட்டியோ நீ மரியாதையாக பழையபடி சட்டிக்குள் போகிறாயா? இல்லை உன்னை நசுக்கட்டுமா?'' என்றாள்.
ஆனால் மூதாட்டியின் உத்தரவை பட்டாணி கேட்கவில்லை. அங்கிருந்து வேகமாக ஓட்டம் பிடித்தது. அப்போது "நில் நில் ஓடாதே' உன்னுடன் நானும் வருகிறேன்'' என்று இன்னொரு குரல் கேட்டது. பட்டாணி திரும்பிப் பார்த்தது, அப்படிக் கத்தியது என்று சொன்னது எரிந்து கொண்டிருந்த ஒரு துண்டு நிலக்கரி.
"அடுப்பிற்குள் இருந்தால் எனக்கு மூச்சு முட்டுகிறது. அதனால் நானும் உன்னுடன் வெளியுலகைப் பார்க்க வருகிறேன்'' என்றது, நிலக்கரி.
"என்ன வெளியுலகைப் பார்க்கப் போகிறாயா?. அப்படியென்றால் என்னையும் உங்களுடன் அழைத்துச் செல்லுங்கள்''. என்றது கீழே கிடந்த வைக்கோல் ஒன்று.
"சரி, வா போகலாம்'' என்று நிலக்கரியும் பட்டாணியும்? வைக்கோலை தங்களுடன் கூட்டு சேர்த்துக் கொண்டன.
மூன்றும் சேர்ந்து நடந்தபோது சாலையின் ஓரிடத்தில் விரிசல் விட்டிருந்தது. அந்த இடத்தில் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது.
"இனி நாம் தொடர்ந்து செல்ல முடியாது. அதனால் நான் அடுப்பிற்கே போய் விடுகிறேன்'' என்றது, நிலக்கரி.
"அப்படியென்றால் நானும் அடுப்பில் எரியும் சட்டிக்குள் போய் விடுவேன்'' என்றது பட்டாணி.
"நண்பர்களே சோர்ந்து விடாதீர்கள். நான் இந்த பாலத்திற்கு (விரிசல்) இணைப்பாக இருக்கிறேன். நீங்கள் இருவரும் என்மீது ஏறி நடந்து மறுபக்கம் போய்விடலாம்'' என்று நம்பிக்கைïட்டியது, வைக்கோல்.
முதலில் பட்டாணி, வைக்கோல் மீது ஏறி விரிசலின் மறுபக்கத்தை அடைந்தது. ஆனால் எரிந்து கொண்டிருந்த நிலக்கரி, வைக்கோல் மீது ஏறியதும் அது தீப்பிடித்துக் கொண்டது. இதனால் இரண்டும் சேர்ந்து தண்ணீருக்குள் விழுந்தன.
"ஷ்..ஷ்..ஷ்...''தன் மீது எரிந்து கொண்டிருந்த நெருப்பு அணைந்ததும் நிலக்கரி பெருமூச்சு விட்டது.
அந்த வினோத சத்தத்தைக் கேட்ட பட்டாணி சிரிக்க ஆரம்பித்தது. தொடர்ந்து அது பலமாகச் சிரித்ததால் வெடித்து சிதறி அதிலிருந்த ஒவ்வொரு பட்டாணியும் ஓட ஆரம்பித்தன.
அந்தப் பட்டாணிகள் அனைத்தும் ஒரு தையல்கடையை நோக்கிச் சென்றன. தையல்காரரிடம் தயவு செய்து எங்களை ஒன்றாக வைத்து தைத்து விடுங்கள் என்று கேட்டுக் கொண்டன.
தையல்காரரும் பட்டாணிகளின் வேண்டுகோளை ஏற்று ஒரு தடித்த நூல் கொண்டு தைத்து விட்டார்.
இதனால் தான் அன்று முதல் பட்டாணியை நாம் உரிப்பதற்கு அதன் மேல் தோலில் நூல் போல் உள்ள பகுதியை உரிக்கவேண்டியிருக்கிறது.
Thursday, December 16, 2010
மெய்ப் பொருள் நாயனார்
நாயன்மார்னா யாரு தெரியுமா? சிவனை நாயகனாய் போற்றுபவர்கள் நாயன்மார்கள். அவர்களுக்கு சாப்பாடு, தூக்கம் எப்பவும் சிவனையே நினைச்சுக்குட்டு இருப்பாங்க.
அதமாதிரி ஒரு ராஜா ஒருத்தர், விழுப்புரத்துக்கிட்ட இருக்கிற திருக்கோவிலூர்ங்கிற ஊர ஆட்சி பண்ணிண்டுருந்த்தார். அவரு பேரு மெய்ப்பொருள் நாயனார்.
அவர வேற எந்தநாட்டு ராஜாவலயும் ஜயிக்கமுடியல. காரணம் அவர்கிட்ட இருந்த சிவ பக்தியும், விசுவாசமான வீரர்களூம். அதில்லாம அவரும் எல்லாருக்கும் நிறைய வாரி வாரிகொடுத்து உதவி செய்வாரு. அதுனால எல்லாரும் அவர சாமி மாதிரி கும்பிட்டாங்க.
இதப்பார்த்த மத்த நாட்டு ராஜாக்குல்லாம் பொறாமையாப் போச்சு, இவர எப்படியாவது தோக்கடிச்சு, இவரோட நாட்ட புடிக்கணும்னு பல தடவை முயற்சி பண்ணி தோத்துட்டாங்க.
விபூதி பூசி ருத்ராக்ஷம் போட்டுகிட்டு யார் வந்தாலும் அவுங்களுக்கு தேவையான துணி, சாப்பாடுன்னு கொடுப்பார்..
இதத் தெரிஞ்சுகிட்ட எதிரி நாட்டு ராஜா ஒருத்தன் என்ன பண்ணினான், தங்கிட்ட இருந்த ஒற்றன் ஒருத்தன திருக்கோவிலூருக்கு சிவனடியார் வேஷத்துல அனுப்பிவச்சான். அவன் பேரு முத்தநாதன்.
அவனும் வேஷம் கட்டிக்கிட்டு நாட்டுக்குள்ள நுழைஞ்சுட்டான். நேரே அரண்மனைக்கு போனான். இவனோட விபூதியையும் ருத்ராக்ஷத்தையும் பார்த்த காவல்காரங்க உள்ளே விட்டுட்டாங்க.
மன்னர் மெய்ப்பொருள் நாயனார் அரச சபையில் இருந்தார். சபைக்கு ஒரு சிவனடியார் வருகிறார் என்றவுடன், அவரை ஓடி வந்து வரவேற்றார்.
சிவனடியார் வேஷத்துல இருந்த முத்தநாதன், தன்னோட வேலய ஆரம்பித்தான். அவன் மன்னனை நோக்கி, மன்னா நான் பல அரிய மந்திரங்களையெல்லாம் பல காலம் தவம் செய்து பெற்றிருக்கிறேன். அவற்றில் சிலவற்றை உங்களுக்குத் தரவே நான் வந்திருக்கிறேன் என்றான்.
இதைகேட்ட மன்னனும் மகிழ்ந்து, ஐயா நாங்கள் செய்த பாக்கியம் இது. உங்கள் விருப்பப்படி பெற்றுக்கொள்ள தயாராயிருக்கிறேன் என்றார். இதை சற்றும் எதிர் பார்க்காத முத்த நாதன் சமாளித்துக்கொண்டு, ஐயா இதை நான் எல்லார் முன்னாலும் உங்களுக்கு தரமுடியாது.
தங்களது தனியான இடத்தில் தான் தரமுடியும் ஆக அதற்கு ஏற்பாடு செய்யுங்கள் என்றான்.
மன்னனும் தன்னுடைய தனிமாளிகைக்கு முத்தநாதனை அழைத்து சென்றார். சிவனடியார் வேஷத்திலிருந்த முத்த நாதன் ஏதோ மந்திரம் ஜபிப்பது போல் நடித்து, மன்னர் காணாத வேளையில், தன்னுடைய இடுப்பில் மறைத்து வைத்திருந்த கோடரியாலே, மன்னர் மெய்ப்பொருள் நாயனாரை வயிற்றில் குத்தி கீழே தள்ளினான்.
இதை அரண்மனை ஒற்றன் ஒருவன் பார்த்து விட்டு, முத்தநாதனை கையும் களவுமாய் பிடித்து, கொலை செய்ய பாய்ந்துவிட்டான்.
இதைக்கண்ட மன்னர் மெய்ப்பொருள் நாயனார், முத்தநாதனை பிடித்த தனது வீரனை, "தத்தா நமர்" இவர் நம்மவர், இவர் கெடுதல் செய்திருந்தாலும், இவருக்கு நாம் தீங்கு செய்யக்கூடாது. ஆகவே இவரை நம் நாட்டு எல்லைவரை ஜாக்கிரதையாய் கொண்டுவிட்டு வரவேண்டியது உன்பொறுப்பு என்று கூறி உயிரை விட்டார்.
மன்னரை சிவனடியார் வேஷத்தில் வந்த ஒருவன் கொன்றுவிட்டான் என்ற செய்தி காட்டுத்தீயாய் பரவி மக்களனைவரும் அரண்மனைமுன் கூடிவிட்டனர்.
தனக்கு சதி மூலம் தீங்கு செய்வதனுக்கும் கருணை காட்டி உயிர் பிச்சையளித்த மன்னர் மெய்ப்பொருள் நாயனாரின் சிவபக்தி இன்றளவும் பக்தியுடன் போற்றப்படுகிறது.
அதமாதிரி ஒரு ராஜா ஒருத்தர், விழுப்புரத்துக்கிட்ட இருக்கிற திருக்கோவிலூர்ங்கிற ஊர ஆட்சி பண்ணிண்டுருந்த்தார். அவரு பேரு மெய்ப்பொருள் நாயனார்.
அவர வேற எந்தநாட்டு ராஜாவலயும் ஜயிக்கமுடியல. காரணம் அவர்கிட்ட இருந்த சிவ பக்தியும், விசுவாசமான வீரர்களூம். அதில்லாம அவரும் எல்லாருக்கும் நிறைய வாரி வாரிகொடுத்து உதவி செய்வாரு. அதுனால எல்லாரும் அவர சாமி மாதிரி கும்பிட்டாங்க.
இதப்பார்த்த மத்த நாட்டு ராஜாக்குல்லாம் பொறாமையாப் போச்சு, இவர எப்படியாவது தோக்கடிச்சு, இவரோட நாட்ட புடிக்கணும்னு பல தடவை முயற்சி பண்ணி தோத்துட்டாங்க.
விபூதி பூசி ருத்ராக்ஷம் போட்டுகிட்டு யார் வந்தாலும் அவுங்களுக்கு தேவையான துணி, சாப்பாடுன்னு கொடுப்பார்..
இதத் தெரிஞ்சுகிட்ட எதிரி நாட்டு ராஜா ஒருத்தன் என்ன பண்ணினான், தங்கிட்ட இருந்த ஒற்றன் ஒருத்தன திருக்கோவிலூருக்கு சிவனடியார் வேஷத்துல அனுப்பிவச்சான். அவன் பேரு முத்தநாதன்.
அவனும் வேஷம் கட்டிக்கிட்டு நாட்டுக்குள்ள நுழைஞ்சுட்டான். நேரே அரண்மனைக்கு போனான். இவனோட விபூதியையும் ருத்ராக்ஷத்தையும் பார்த்த காவல்காரங்க உள்ளே விட்டுட்டாங்க.
மன்னர் மெய்ப்பொருள் நாயனார் அரச சபையில் இருந்தார். சபைக்கு ஒரு சிவனடியார் வருகிறார் என்றவுடன், அவரை ஓடி வந்து வரவேற்றார்.
சிவனடியார் வேஷத்துல இருந்த முத்தநாதன், தன்னோட வேலய ஆரம்பித்தான். அவன் மன்னனை நோக்கி, மன்னா நான் பல அரிய மந்திரங்களையெல்லாம் பல காலம் தவம் செய்து பெற்றிருக்கிறேன். அவற்றில் சிலவற்றை உங்களுக்குத் தரவே நான் வந்திருக்கிறேன் என்றான்.
இதைகேட்ட மன்னனும் மகிழ்ந்து, ஐயா நாங்கள் செய்த பாக்கியம் இது. உங்கள் விருப்பப்படி பெற்றுக்கொள்ள தயாராயிருக்கிறேன் என்றார். இதை சற்றும் எதிர் பார்க்காத முத்த நாதன் சமாளித்துக்கொண்டு, ஐயா இதை நான் எல்லார் முன்னாலும் உங்களுக்கு தரமுடியாது.
தங்களது தனியான இடத்தில் தான் தரமுடியும் ஆக அதற்கு ஏற்பாடு செய்யுங்கள் என்றான்.
மன்னனும் தன்னுடைய தனிமாளிகைக்கு முத்தநாதனை அழைத்து சென்றார். சிவனடியார் வேஷத்திலிருந்த முத்த நாதன் ஏதோ மந்திரம் ஜபிப்பது போல் நடித்து, மன்னர் காணாத வேளையில், தன்னுடைய இடுப்பில் மறைத்து வைத்திருந்த கோடரியாலே, மன்னர் மெய்ப்பொருள் நாயனாரை வயிற்றில் குத்தி கீழே தள்ளினான்.
இதை அரண்மனை ஒற்றன் ஒருவன் பார்த்து விட்டு, முத்தநாதனை கையும் களவுமாய் பிடித்து, கொலை செய்ய பாய்ந்துவிட்டான்.
இதைக்கண்ட மன்னர் மெய்ப்பொருள் நாயனார், முத்தநாதனை பிடித்த தனது வீரனை, "தத்தா நமர்" இவர் நம்மவர், இவர் கெடுதல் செய்திருந்தாலும், இவருக்கு நாம் தீங்கு செய்யக்கூடாது. ஆகவே இவரை நம் நாட்டு எல்லைவரை ஜாக்கிரதையாய் கொண்டுவிட்டு வரவேண்டியது உன்பொறுப்பு என்று கூறி உயிரை விட்டார்.
மன்னரை சிவனடியார் வேஷத்தில் வந்த ஒருவன் கொன்றுவிட்டான் என்ற செய்தி காட்டுத்தீயாய் பரவி மக்களனைவரும் அரண்மனைமுன் கூடிவிட்டனர்.
தனக்கு சதி மூலம் தீங்கு செய்வதனுக்கும் கருணை காட்டி உயிர் பிச்சையளித்த மன்னர் மெய்ப்பொருள் நாயனாரின் சிவபக்தி இன்றளவும் பக்தியுடன் போற்றப்படுகிறது.
Wednesday, December 15, 2010
ஜெரி சொன்னா கேட்கணும்
ஒரு முறை புளியங்குடி காட்டில் மழை பெய்யாததால் மரம், செடி, கொடிகள் எல்லாம் வாடி கருகின. நீர் நிலைகள் வற்றி விலங்குகள் தவித்தன.
பறவைகள் நான்கு திக்கிலும் பறந்து சென்று செழிப்பான இடத்தைத் தேடின.
அப்படிச் சென்ற பறவைகளில் ஒரு ஜோடி கழுகுகளும் இருந்தன.
இரண்டு கழுகுகளும் வெகுதுõரம் பறந்து தாங்கள் கூடு கட்டி, முட்டையிட்டு, குஞ்சுப் பொரித்து குதுõகலமாக குடும்பம் நடத்தத் தகுதியான மரம் இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டு வரும் பொழுது, ஒரு தோப்பு அவற்றின் பார்வையில் பட்டது.
தோப்பில் நிறைய மரங்களிருந்தன. அவற்றில் ஒரு மரம் கிளையுடன் செழித்து வளர்ந்திருந்தது. ஆனால், அது வயதான மரம். அந்த மரத்தில் யாருமே கூடு கட்டவில்லை, ஏன் என்றும் தெரியவில்லை.
யாருமே இல்லாததால் தாங்களே முழுமரத்தையும் உபயோகிக்கலாம், வேறு யாரையும் இனிமேல் அனுமதிக்கக்கூடாது என்று நினைத்து, அம்மரத்தில் கூடு கட்டலாமென்று இரு கழுகுகளும் தீர்மானித்தன. அதன்படியே பலமான குச்சிகளைக் கொண்டு வந்து கூட்டைக் கட்டின. கூடு பலமாக, பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்து கொண்டு அங்கு முட்டை இட்டு, குஞ்சு பொரிக்கலாமென்று அவை பேசிக் கொண்டன.
அப்போது அம்மரத்தடியில் வளை தோண்டி வசிக்கும் ஜெரி எலி ஒன்று வெளியே வந்து, மேலே கூடு கட்டிக் கொண்டிருக்கும் கழுகுகளைப் பார்த்தது. அதன் முகத்தில் கவலை குடி கொண்டது.
""கழுகுகளே... மேலே என்ன செய்கிறீர்கள்?'' என்று கேட்டது ஜெரி.
""கூடு கட்டுகிறோம்!'' என்றது ஆண் கழுகு.
""இந்த மரத்திலேயா தங்கப் போறீங்க?'' என்று கேட்டது ஜெரி.
""ஆமாம்! அதற்காகத் தான் கூடு கட்டுகிறோம். தங்குவதோடு, முட்டையிட்டு குஞ்சும் பொரித்துக் கொள்ளப் போகிறோம்!, குஞ்சுகள் வந்தப் பின்பு அவைகள் இம்மரத்தின் மேலேயே கூடு கட்டும், இனிமேல் இது எங்களுக்கு மட்டுமே சொந்தமான மரம்'' என்றது பெண் கழுகு.
""நீங்கள் கூடு கட்டி குஞ்சு பொரிப்பது பற்றி மிகவும் சந்தோஷம்... ஆனால்?'' என்று இழுத்தது ஜெரி எலி.
""என்ன ஆனால் என்று இழுக்கிறாய்?'' என்று கேட்டது ஆண் கழுகு.
""நீங்கள் வேறு ஒரு மரத்தில் கூடு கட்டக்கூடாதா?''
""ஏன் இந்த மரத்துக்கு என்ன?''
""இந்த மரம் வயதான மரம். நான் இதன் கீழ் பூமியில் வளை தோண்டி வசிக்கிறேன். அதனால் இம்மரத்தின் வேர் எப்படிப்பட்டது என்று எனக்குத் தெரியும். இம்மரம் பார்ப்பதற்கு பெரியதாக இருக்கிறதே தவிர, இதன் வேர்கள் எல்லாம் பூமியில் பலம் குன்றியுள்ளன. இம்மரம் பலமான காற்றை தாங்குமா என்பது சந்தேகம்தான். அதனால் தான் சொல்கிறேன்!'' என்றது ஜெரி.
""நாங்கள் இங்கேதான் கூடு கட்டி குஞ்சு பொரித்து இருப்போம்... அற்ப ஜீவன் நீ...! யோசனை கூறவோ, அறிவுரை கூறவோ உனக்கு என்ன தகுதி இருக்கிறது?'' என்றது ஆண் கழுகு.
""என்னமோ எனக்குத் தெரிந்ததைச் சொன்னேன். கேட்டால் கேளுங்கள்; கேட்காவிட்டால் போங்கள்!'' என்றது ஜெரி.
""அதிகமாகப் பேசினால், உன்னையே கொத்தி சாப்பிட்டு விடுவேன்...! வாயை மூடிக் கொண்டு போ!'' என்றது பெண் கழுகு. பேசியதோடு இல்லாமல் எலியின் மீது பாய இரண்டு கழுகுகளும் ஆக்ரோஷமுடன் "சர்'ரென்று பறந்து வந்தன.
வளைக்குள் பாய்ந்து சென்று அவைகளிடமிருந்து தப்பிவிட்டது ஜெரி.
கூட்டை பலமாக கட்டியப்பின்பு மூன்று முட்டையிட்டு குஞ்சு பொறிக்க காத்திருந்தன, சில நாட்களில் மூன்று கழுகு குஞ்சுகள் முட்டையை விட்டு வெளியில் வந்தன. ஆண் கழுகும், பெண் கழுகும் குஞ்சு கழுகுகளைப் பார்த்து, பார்த்து மகிழ்ந்தன.
சில நாட்கள் சென்றன. ஒரு நள் மாலையில் இரு கழுகுகளும் உணவு தேட வெளியே சென்றன, அப்படியே வெகுதூரம் போய் விட்டன.
அப்போ முதலில் லேசாக ஒரு காற்று வீசிற்று. பிறகு அது கொஞ்சம் பலமானது. பிறகு இன்னும் கொஞ்சம் பலமானது; அப்புறம் மிக மிக பலமாகி புயலாக உருவெடுத்தது.
புயல் வரத்தொடங்கியதை அறிந்த இரு கழுகுகளும் வேகமாக தங்கள் கூட்டிற்கு வர நினைத்தன, ஆனால் காற்றில் அவற்றால் பறக்க முடியவில்லை. அன்று இரவு முழுவதும் ஒரு மலைக்குகையில் பதுங்கி இருந்தன.
மறுநாள் காலையில் வேகவேகமாக தங்கள் குஞ்சுகள் இருக்கும் மரத்திற்கு வந்து பார்த்த போது, அவற்றின் இதயமே நின்று போய்விட்டது.
ஆமாம், அங்கே இருந்த அந்த பெரிய வயதான மரம், அடியோடு சாய்ந்து விழுந்து கிடந்தது, மரக்கிளைகள் எல்லாம் நொறுங்கி தூள் தூளாகியிருந்தது, அதை பார்த்த இரு கழுகுகளும் தங்கள் 3 குஞ்சுகள் இறந்து போய் விட்டதே, சின்ன எலி அன்றே சொன்னது அதை கேட்காமல் தங்கள் அருமை குஞ்சுகளை இழந்து விட்டோமே என்று கதறி அழுதன.
அப்போ அங்கே வந்த ஜெரி எலி "இப்போ அழுது என்ன பயன், அன்றே நான் சொன்னதை கேட்டிருந்தால் இப்படி நடந்திருக்குமா, என் உருவத்தை பார்த்து, நான் சொன்ன நல்ல விசயத்தை ஏளனம் செய்தீங்களே!" என்றது.
உடனே கழுகுகள் "உண்மை தான், எங்களை மன்னியுங்கள், உங்கள் பேச்சை கேட்காததால் எங்கள் குழந்தைகள் இறந்து போய்விட்டன" என்றன.
உடனே ஜெரி "உங்க குழந்தைகள் இறந்து போனதாக யார் சொன்னார்கள்"?
பெண் கழுகு "அதோ அந்த பெரிய மரம் அடியோடு சாய்ந்து கிடக்கிறது, அதன் அடியில் தான் எங்கள் குழந்தைகள் நசுங்கி போயிருப்பாங்க".
ஜெரி "கவலை வேண்டாம் என் அருமை நண்பர்களே! காற்று பலமாக அடிக்கத் தொடங்கியதும், நான் என் குரங்கு நண்பன் கபீஷிடம் சொல்லி, உங்கள் குழந்தைகளை அருகில் இருக்கும் மலைக்குகையில் பத்திரமாக பார்த்துக் கொள்ளச் சொல்லியிருக்கிறேன், அங்கே தான் அனைத்து பறவைகள், விலங்குகள் இருக்கின்றன, வாங்க போய் உங்க அருமை குழந்தைகளை பார்க்கலாம்" என்றது.
அதைக் கேட்ட இரு கழுகுகளுக்கும் ஆனந்த கண்ணீர், இருவரும் ஜெரியிடம் மீண்டும் மன்னிப்பு கேட்டு, நன்றியை சொன்னார்கள்.
உடனே மலைக்குகைக்கு சென்று அங்கே கபீஷிக்கும் நன்றி சொல்லி, தங்கள் குழந்தைகளை கட்டி பிடித்து முத்தமிட்டு மகிழ்ந்தார்கள். அன்று முதல் அந்த கழுகுகளும், நம்ம ஜெரி எலியாரும், கபீஷ் குரங்காரும் நல்ல நண்பர்கள்.
பறவைகள் நான்கு திக்கிலும் பறந்து சென்று செழிப்பான இடத்தைத் தேடின.
அப்படிச் சென்ற பறவைகளில் ஒரு ஜோடி கழுகுகளும் இருந்தன.
இரண்டு கழுகுகளும் வெகுதுõரம் பறந்து தாங்கள் கூடு கட்டி, முட்டையிட்டு, குஞ்சுப் பொரித்து குதுõகலமாக குடும்பம் நடத்தத் தகுதியான மரம் இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டு வரும் பொழுது, ஒரு தோப்பு அவற்றின் பார்வையில் பட்டது.
தோப்பில் நிறைய மரங்களிருந்தன. அவற்றில் ஒரு மரம் கிளையுடன் செழித்து வளர்ந்திருந்தது. ஆனால், அது வயதான மரம். அந்த மரத்தில் யாருமே கூடு கட்டவில்லை, ஏன் என்றும் தெரியவில்லை.
யாருமே இல்லாததால் தாங்களே முழுமரத்தையும் உபயோகிக்கலாம், வேறு யாரையும் இனிமேல் அனுமதிக்கக்கூடாது என்று நினைத்து, அம்மரத்தில் கூடு கட்டலாமென்று இரு கழுகுகளும் தீர்மானித்தன. அதன்படியே பலமான குச்சிகளைக் கொண்டு வந்து கூட்டைக் கட்டின. கூடு பலமாக, பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்து கொண்டு அங்கு முட்டை இட்டு, குஞ்சு பொரிக்கலாமென்று அவை பேசிக் கொண்டன.
அப்போது அம்மரத்தடியில் வளை தோண்டி வசிக்கும் ஜெரி எலி ஒன்று வெளியே வந்து, மேலே கூடு கட்டிக் கொண்டிருக்கும் கழுகுகளைப் பார்த்தது. அதன் முகத்தில் கவலை குடி கொண்டது.
""கழுகுகளே... மேலே என்ன செய்கிறீர்கள்?'' என்று கேட்டது ஜெரி.
""கூடு கட்டுகிறோம்!'' என்றது ஆண் கழுகு.
""இந்த மரத்திலேயா தங்கப் போறீங்க?'' என்று கேட்டது ஜெரி.
""ஆமாம்! அதற்காகத் தான் கூடு கட்டுகிறோம். தங்குவதோடு, முட்டையிட்டு குஞ்சும் பொரித்துக் கொள்ளப் போகிறோம்!, குஞ்சுகள் வந்தப் பின்பு அவைகள் இம்மரத்தின் மேலேயே கூடு கட்டும், இனிமேல் இது எங்களுக்கு மட்டுமே சொந்தமான மரம்'' என்றது பெண் கழுகு.
""நீங்கள் கூடு கட்டி குஞ்சு பொரிப்பது பற்றி மிகவும் சந்தோஷம்... ஆனால்?'' என்று இழுத்தது ஜெரி எலி.
""என்ன ஆனால் என்று இழுக்கிறாய்?'' என்று கேட்டது ஆண் கழுகு.
""நீங்கள் வேறு ஒரு மரத்தில் கூடு கட்டக்கூடாதா?''
""ஏன் இந்த மரத்துக்கு என்ன?''
""இந்த மரம் வயதான மரம். நான் இதன் கீழ் பூமியில் வளை தோண்டி வசிக்கிறேன். அதனால் இம்மரத்தின் வேர் எப்படிப்பட்டது என்று எனக்குத் தெரியும். இம்மரம் பார்ப்பதற்கு பெரியதாக இருக்கிறதே தவிர, இதன் வேர்கள் எல்லாம் பூமியில் பலம் குன்றியுள்ளன. இம்மரம் பலமான காற்றை தாங்குமா என்பது சந்தேகம்தான். அதனால் தான் சொல்கிறேன்!'' என்றது ஜெரி.
""நாங்கள் இங்கேதான் கூடு கட்டி குஞ்சு பொரித்து இருப்போம்... அற்ப ஜீவன் நீ...! யோசனை கூறவோ, அறிவுரை கூறவோ உனக்கு என்ன தகுதி இருக்கிறது?'' என்றது ஆண் கழுகு.
""என்னமோ எனக்குத் தெரிந்ததைச் சொன்னேன். கேட்டால் கேளுங்கள்; கேட்காவிட்டால் போங்கள்!'' என்றது ஜெரி.
""அதிகமாகப் பேசினால், உன்னையே கொத்தி சாப்பிட்டு விடுவேன்...! வாயை மூடிக் கொண்டு போ!'' என்றது பெண் கழுகு. பேசியதோடு இல்லாமல் எலியின் மீது பாய இரண்டு கழுகுகளும் ஆக்ரோஷமுடன் "சர்'ரென்று பறந்து வந்தன.
வளைக்குள் பாய்ந்து சென்று அவைகளிடமிருந்து தப்பிவிட்டது ஜெரி.
கூட்டை பலமாக கட்டியப்பின்பு மூன்று முட்டையிட்டு குஞ்சு பொறிக்க காத்திருந்தன, சில நாட்களில் மூன்று கழுகு குஞ்சுகள் முட்டையை விட்டு வெளியில் வந்தன. ஆண் கழுகும், பெண் கழுகும் குஞ்சு கழுகுகளைப் பார்த்து, பார்த்து மகிழ்ந்தன.
சில நாட்கள் சென்றன. ஒரு நள் மாலையில் இரு கழுகுகளும் உணவு தேட வெளியே சென்றன, அப்படியே வெகுதூரம் போய் விட்டன.
அப்போ முதலில் லேசாக ஒரு காற்று வீசிற்று. பிறகு அது கொஞ்சம் பலமானது. பிறகு இன்னும் கொஞ்சம் பலமானது; அப்புறம் மிக மிக பலமாகி புயலாக உருவெடுத்தது.
புயல் வரத்தொடங்கியதை அறிந்த இரு கழுகுகளும் வேகமாக தங்கள் கூட்டிற்கு வர நினைத்தன, ஆனால் காற்றில் அவற்றால் பறக்க முடியவில்லை. அன்று இரவு முழுவதும் ஒரு மலைக்குகையில் பதுங்கி இருந்தன.
மறுநாள் காலையில் வேகவேகமாக தங்கள் குஞ்சுகள் இருக்கும் மரத்திற்கு வந்து பார்த்த போது, அவற்றின் இதயமே நின்று போய்விட்டது.
ஆமாம், அங்கே இருந்த அந்த பெரிய வயதான மரம், அடியோடு சாய்ந்து விழுந்து கிடந்தது, மரக்கிளைகள் எல்லாம் நொறுங்கி தூள் தூளாகியிருந்தது, அதை பார்த்த இரு கழுகுகளும் தங்கள் 3 குஞ்சுகள் இறந்து போய் விட்டதே, சின்ன எலி அன்றே சொன்னது அதை கேட்காமல் தங்கள் அருமை குஞ்சுகளை இழந்து விட்டோமே என்று கதறி அழுதன.
அப்போ அங்கே வந்த ஜெரி எலி "இப்போ அழுது என்ன பயன், அன்றே நான் சொன்னதை கேட்டிருந்தால் இப்படி நடந்திருக்குமா, என் உருவத்தை பார்த்து, நான் சொன்ன நல்ல விசயத்தை ஏளனம் செய்தீங்களே!" என்றது.
உடனே கழுகுகள் "உண்மை தான், எங்களை மன்னியுங்கள், உங்கள் பேச்சை கேட்காததால் எங்கள் குழந்தைகள் இறந்து போய்விட்டன" என்றன.
உடனே ஜெரி "உங்க குழந்தைகள் இறந்து போனதாக யார் சொன்னார்கள்"?
பெண் கழுகு "அதோ அந்த பெரிய மரம் அடியோடு சாய்ந்து கிடக்கிறது, அதன் அடியில் தான் எங்கள் குழந்தைகள் நசுங்கி போயிருப்பாங்க".
ஜெரி "கவலை வேண்டாம் என் அருமை நண்பர்களே! காற்று பலமாக அடிக்கத் தொடங்கியதும், நான் என் குரங்கு நண்பன் கபீஷிடம் சொல்லி, உங்கள் குழந்தைகளை அருகில் இருக்கும் மலைக்குகையில் பத்திரமாக பார்த்துக் கொள்ளச் சொல்லியிருக்கிறேன், அங்கே தான் அனைத்து பறவைகள், விலங்குகள் இருக்கின்றன, வாங்க போய் உங்க அருமை குழந்தைகளை பார்க்கலாம்" என்றது.
அதைக் கேட்ட இரு கழுகுகளுக்கும் ஆனந்த கண்ணீர், இருவரும் ஜெரியிடம் மீண்டும் மன்னிப்பு கேட்டு, நன்றியை சொன்னார்கள்.
உடனே மலைக்குகைக்கு சென்று அங்கே கபீஷிக்கும் நன்றி சொல்லி, தங்கள் குழந்தைகளை கட்டி பிடித்து முத்தமிட்டு மகிழ்ந்தார்கள். அன்று முதல் அந்த கழுகுகளும், நம்ம ஜெரி எலியாரும், கபீஷ் குரங்காரும் நல்ல நண்பர்கள்.
Tuesday, December 14, 2010
வீரச்சிறுவன்
சோழநாட்டை குலோத்துங்கன் என்ற மன்னன் சீரும் சிறப்புமாக ஆண்டு வந்தார். இவர்தான் "சுங்கம் தவிர்த்த சோழன்' என்று வரலாற்றில் பேசப்படும் மன்னர். சோழ மரபிற்கு ஒரே வாரிசு.
குலோத்துங்கன் ஆட்சியில் கல்வியில் சிறந்த புலவர்கள் அரசனை நாடிப் பொன்னும் பொருளும் பெற்றுச் சென்றனர். அதே போல் வீரர்கள் தங்கள் வீரத்தைக் காட்டிப் பரிசுகள் பல பெற்றனர். நாடெங்கிலும் திருவிழாக்கள் கோலாகலமாய் நடந்தன. மன்னன் செங்கோல் தவறாது ஆட்சி நடத்தி வந்தார்.
அக்காலத்தில் கடோத்கஜன் என்ற மாளவ நாட்டு மல்லன் ஒருவன் நாடெங்கும் போரிட்டு வெற்றிக்கொடி நாட்டி வந்தான். வட இந்தியாவில் பல மல்லர்களை ஜெயித்த அவன் தென்னகத்திற்கும் விஜயம் செய்தான்.
மற்போரில் மட்டுமல்லாமல், வில்வித்தைகளிலும், வாட்போரிலும் வாகை சூடிவந்தான். அவன் பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே வீரர்கள் நடுநடுங்கினர்.
அவனை எதிர்த்துப் போரிட்டுத் தோற்ற வீரர்களின் தலைகளை மொட்டை அடித்து அவர்களைத் தன் அடிமைகளாக்கினான். தான் செல்லும் தேசங்கள் தோறும் அவர்களைப் பரிவாரங்களாக அழைத்துச் சென்றான். அதனால் சிறந்த வீரர்களும் கூட அவனை எதிர்க்க அஞ்சினர்.
சோழநாட்டிற்கு வந்த அவன் மன்னன் குலோத்துங்கனைக் கண்டு ""என் சவாலை ஏற்கக் கூடிய வீரர்கள் உம் நாட்டில் உள்ளனரா?'' என்று ஆணவத்துடன் கேட்டான்.
மன்னன் பறை முழங்கி வீரர்களுக்கு இச்செய்தியை அறிவித்தார்.
சோழநாடு வீரத்தில் என்றும் சோடை போனதில்லை. வீரர்கள் பலர் திரண்டனர். விற்போருக்கும், மற்போருக்கும் நாட்கள் குறிக்கப்பட்டன.
அன்று அரண்மனை மைதானத்தில் மன்னர் முன் ஆயிரக் கணக்கானோர் கூடினர். போட்டி ஆரம்பமாயிற்று.
முதல் நாள் வாட்போர்—
பத்துக்கும் மேற்பட்ட சோழநாட்டு வீரர்கள் கடோத்கஜனிடம் வரிசையாகத் தோற்றனர். அவர்களால் பத்து நிமிடம் கூட தாக்குப்பிடிக்க முடியவில்லை.
தோற்ற வீரர்களை கடோத்கஜனின் ஆட்கள் கூடாரத்திற்கு இழுத்துச் சென்று உடனுக்குடன் மொட்டை போட்டு அவமானப்படுத்தி அடிமையாக்கினர்.
மறுநாள் மற்போர்—
சோழநாட்டின் மானத்தைக் காக்க வீரன் ஒருவன் இன்றாவது வருவானா என்று மன்னன் ஏங்கிக் கொண்டிருந்தார்.
கடல் அலையெனத் திரண்டிருந்த கூட்டத்தில் சிங்கமெனக் கர்ஜித்தான் கடோத்கஜன். அவனது திண்ணிய தோள்களும், விம்மிப்புடைத்த மார்பும், வலிமைபொருந்திய கால்களும், தினவெடுத்த கைகளும், அனல்கக்கும் பார்வையும் அனைவரையும் அச்சமுறச் செய்தன.
கோதாவில் நின்று கொக்கரித்த அவனை எதிர்க்க யாரும் முன்வரவில்லை.
""மன்னா! உம்மிடம் மலைபோல் படையிருந்தும் என்னை எதிர்க்க எந்த மல்லனும் வரவில்லை. பார்த்தீர்களா என பராக்கிரமத்தை?'' என்று இறுமாப்புடன் சொன்னான்.
மன்னன் வெட்கித் தலைகுனிந்தான்.
அதே நேரத்தில்—
""இதோ, நானிருக்கிறேன்,'' என்று கூட்டத்தில் ஒரு குரல் எழுந்தது.
அனைவரும் திரும்பிப் பார்த்தனர்.
பத்து வயது சிறுவன் ஒருவன் திறந்த மார்புடன் வெளியே வந்தான்.
""ஏய் சிறுவனே, நீயா எனக்கு எதிரி? மூட்டைப் பூச்சியை நசுக்குவது போல் நசுக்கிவிடுவேன். உயிர் பிழைக்க ஓடிவிடு,'' எனக் கர்ஜித்தான் கடோத்கஜன்.
என்ன ஆச்சரியம்! கண் சிமிட்டும் நேரத்தில் பறந்து சென்ற சிறுவன், மல்லனின் தோள்களில் அமர்ந்து தன் வலக்கையை நீட்டி அவன் கழுத்தில் மின்னலாய் ஒரு வெட்டு வெட்டினான். அவ்வளவுதான்... கடோத்கஜனின் கழுத்து நரம்பொன்று சுளுக்கி வலப்பக்கம் 45 டிகிரி கோணத்தில் முகம் பின்புறம் திரும்பிக் கொண்டது. அவனது விழிகள் சுழன்றன. கற்சிலையாய் அசைவற்று நின்றான்.
தோள்களிலிருந்து கீழே குதித்த சிறுவன் மல்லனின் இடது காலை வாரி அவனை மண்ணைக் கவ்வச் செய்தான்.
கூட்டம் ஆரவாரித்தது. சிறுவனைத் தலை மேல் துõக்கி வைத்துக் கூத்தாடியது.
யாரிந்தச் சிறுவன்?
உடலின் நரம்புகளின் ஓட்டம் அறிந்து இன்ன நரம்பைத் தட்டினால் இப்படி ஆகும் என்று கூறும் வர்ம சாஸ்திரக் கலை நிபுணர் வரகுணபதியின் மகன் கபிலன் தான் அவன்.
கடோத்கஜினின் மனைவியும், மக்களும் மன்னனிடம் மன்னிப்புக் கேட்க, சிறுவன் கபிலன் கழுத்து நரம்பில் மற்றுமொரு தட்டு தட்டிவிட்டு தலைக்கோணலைச் சரியாக்கினான்.
கடோத்கஜன்வெட்கித்தலைகுனிந்தான். அவனுடைய ஆணவம் அன்றோடு அழிந்தது. தான் அடிமைபடுத்தி இருந்த ஆட்களை எல்லாம் அன்றே விடுதலை செய்து அனுப்பி வைத்தான்.
குலோத்துங்கன் ஆட்சியில் கல்வியில் சிறந்த புலவர்கள் அரசனை நாடிப் பொன்னும் பொருளும் பெற்றுச் சென்றனர். அதே போல் வீரர்கள் தங்கள் வீரத்தைக் காட்டிப் பரிசுகள் பல பெற்றனர். நாடெங்கிலும் திருவிழாக்கள் கோலாகலமாய் நடந்தன. மன்னன் செங்கோல் தவறாது ஆட்சி நடத்தி வந்தார்.
அக்காலத்தில் கடோத்கஜன் என்ற மாளவ நாட்டு மல்லன் ஒருவன் நாடெங்கும் போரிட்டு வெற்றிக்கொடி நாட்டி வந்தான். வட இந்தியாவில் பல மல்லர்களை ஜெயித்த அவன் தென்னகத்திற்கும் விஜயம் செய்தான்.
மற்போரில் மட்டுமல்லாமல், வில்வித்தைகளிலும், வாட்போரிலும் வாகை சூடிவந்தான். அவன் பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே வீரர்கள் நடுநடுங்கினர்.
அவனை எதிர்த்துப் போரிட்டுத் தோற்ற வீரர்களின் தலைகளை மொட்டை அடித்து அவர்களைத் தன் அடிமைகளாக்கினான். தான் செல்லும் தேசங்கள் தோறும் அவர்களைப் பரிவாரங்களாக அழைத்துச் சென்றான். அதனால் சிறந்த வீரர்களும் கூட அவனை எதிர்க்க அஞ்சினர்.
சோழநாட்டிற்கு வந்த அவன் மன்னன் குலோத்துங்கனைக் கண்டு ""என் சவாலை ஏற்கக் கூடிய வீரர்கள் உம் நாட்டில் உள்ளனரா?'' என்று ஆணவத்துடன் கேட்டான்.
மன்னன் பறை முழங்கி வீரர்களுக்கு இச்செய்தியை அறிவித்தார்.
சோழநாடு வீரத்தில் என்றும் சோடை போனதில்லை. வீரர்கள் பலர் திரண்டனர். விற்போருக்கும், மற்போருக்கும் நாட்கள் குறிக்கப்பட்டன.
அன்று அரண்மனை மைதானத்தில் மன்னர் முன் ஆயிரக் கணக்கானோர் கூடினர். போட்டி ஆரம்பமாயிற்று.
முதல் நாள் வாட்போர்—
பத்துக்கும் மேற்பட்ட சோழநாட்டு வீரர்கள் கடோத்கஜனிடம் வரிசையாகத் தோற்றனர். அவர்களால் பத்து நிமிடம் கூட தாக்குப்பிடிக்க முடியவில்லை.
தோற்ற வீரர்களை கடோத்கஜனின் ஆட்கள் கூடாரத்திற்கு இழுத்துச் சென்று உடனுக்குடன் மொட்டை போட்டு அவமானப்படுத்தி அடிமையாக்கினர்.
மறுநாள் மற்போர்—
சோழநாட்டின் மானத்தைக் காக்க வீரன் ஒருவன் இன்றாவது வருவானா என்று மன்னன் ஏங்கிக் கொண்டிருந்தார்.
கடல் அலையெனத் திரண்டிருந்த கூட்டத்தில் சிங்கமெனக் கர்ஜித்தான் கடோத்கஜன். அவனது திண்ணிய தோள்களும், விம்மிப்புடைத்த மார்பும், வலிமைபொருந்திய கால்களும், தினவெடுத்த கைகளும், அனல்கக்கும் பார்வையும் அனைவரையும் அச்சமுறச் செய்தன.
கோதாவில் நின்று கொக்கரித்த அவனை எதிர்க்க யாரும் முன்வரவில்லை.
""மன்னா! உம்மிடம் மலைபோல் படையிருந்தும் என்னை எதிர்க்க எந்த மல்லனும் வரவில்லை. பார்த்தீர்களா என பராக்கிரமத்தை?'' என்று இறுமாப்புடன் சொன்னான்.
மன்னன் வெட்கித் தலைகுனிந்தான்.
அதே நேரத்தில்—
""இதோ, நானிருக்கிறேன்,'' என்று கூட்டத்தில் ஒரு குரல் எழுந்தது.
அனைவரும் திரும்பிப் பார்த்தனர்.
பத்து வயது சிறுவன் ஒருவன் திறந்த மார்புடன் வெளியே வந்தான்.
""ஏய் சிறுவனே, நீயா எனக்கு எதிரி? மூட்டைப் பூச்சியை நசுக்குவது போல் நசுக்கிவிடுவேன். உயிர் பிழைக்க ஓடிவிடு,'' எனக் கர்ஜித்தான் கடோத்கஜன்.
என்ன ஆச்சரியம்! கண் சிமிட்டும் நேரத்தில் பறந்து சென்ற சிறுவன், மல்லனின் தோள்களில் அமர்ந்து தன் வலக்கையை நீட்டி அவன் கழுத்தில் மின்னலாய் ஒரு வெட்டு வெட்டினான். அவ்வளவுதான்... கடோத்கஜனின் கழுத்து நரம்பொன்று சுளுக்கி வலப்பக்கம் 45 டிகிரி கோணத்தில் முகம் பின்புறம் திரும்பிக் கொண்டது. அவனது விழிகள் சுழன்றன. கற்சிலையாய் அசைவற்று நின்றான்.
தோள்களிலிருந்து கீழே குதித்த சிறுவன் மல்லனின் இடது காலை வாரி அவனை மண்ணைக் கவ்வச் செய்தான்.
கூட்டம் ஆரவாரித்தது. சிறுவனைத் தலை மேல் துõக்கி வைத்துக் கூத்தாடியது.
யாரிந்தச் சிறுவன்?
உடலின் நரம்புகளின் ஓட்டம் அறிந்து இன்ன நரம்பைத் தட்டினால் இப்படி ஆகும் என்று கூறும் வர்ம சாஸ்திரக் கலை நிபுணர் வரகுணபதியின் மகன் கபிலன் தான் அவன்.
கடோத்கஜினின் மனைவியும், மக்களும் மன்னனிடம் மன்னிப்புக் கேட்க, சிறுவன் கபிலன் கழுத்து நரம்பில் மற்றுமொரு தட்டு தட்டிவிட்டு தலைக்கோணலைச் சரியாக்கினான்.
கடோத்கஜன்வெட்கித்தலைகுனிந்தான். அவனுடைய ஆணவம் அன்றோடு அழிந்தது. தான் அடிமைபடுத்தி இருந்த ஆட்களை எல்லாம் அன்றே விடுதலை செய்து அனுப்பி வைத்தான்.
Monday, December 13, 2010
கருணை கொண்ட உள்ளம்
மகாத்மா காந்தியடிகளின் மானசீகக் குரு என்று கூறப்பட்ட டால்ஸ்டாய் அடிகளின் படைப்பில் இது ஒரு கதை . "What men live by". என்பது அவரிட்ட பெயர். ===========================================
இக்கதை நிகழ்ந்த புலம் மாஸ்கோ. மார்டீன் ஒரு செம்மான், ஏழை. குறைந்த வருவாயில் வாழ்ந்து வருபவன். மனைவியின் தேவைக்காக 'பர்' கோட் ஒன்று வாங்க விழைந்து இயலாமையால், அதற்குப் போதிய பண வசதி(ரூபிள்) இன்மையால் கொஞ்சம் ரொட்டி வாங்கிக் கொண்டு விட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தான்.
வழியில் இருந்த சர்ச் முற்றத்தின் ஊடாக நுழைந்து அந்தி மாலைப் பொழுதில் வந்து கொண்டிருந்த போது யாரோ முக்கி முனகும் சப்தம் கேட்டது. முகம் தெரியாதபடி பனி பெய்துகொண்டிருந்ததால் சற்று நெருங்கி அவன் சென்றுபார்த்தான்.
இளைஞன் ஒருவன் அரைகுறை உடையுடன் அங்கே விழுந்து பனியில் விரைத்துச் சுருண்டு கிடந்தான். இரக்கமும் கருணையும் மேலிட தன் மீது அணிந்து கொண்டிருந்த நீண்ட மேலங்கியைக் கழற்றி அந்த இளைஞனை அணைத்துத் தூக்கி அணிவித்து ஒரு வாடகை வண்டியில் ஏற்றித் தன்வீட்டிற்கு அழைத்து வந்தான்.
தன் குடும்பத்துக்கே பத்தாத நிலையில் வேற்றுநபர் ஒருவரை விருந்தாக அழைத்து வருவது என்ன விபரீத விளைவுகளை ஏற்படுத்தும் என்பது அவனுக்கு நன்கு தெரியும். மனைவியின் மன நிலையைப் பற்றியும் எதிர்வினைகள் பற்றியும் யோசித்தான்.
வீட்டு வாயிலில் கணவனுடன் விருந்தாளி ஒருவனைப் பார்த்த அவள் அன்று ஏனோ வழக்கத்துக்கு மாறாக அமைதியாய் நடந்துகொண்டதோடன்றி அவனது உணவிற்காக எக்கேள்வியும் எழுப்பாமல் ஓட்ஸ் கஞ்சி தயாரித்து சூடாகக் கொடுத்தாள். சோர்வுற்றிருந்த விருந்தாளி பேச்சு மூச்சின்றி இருந்தவன் அவளது முகத்தைப் பார்த்து ஒருஇளநகை செய்துவிட்டு கஞ்சியைக் குடித்தான். கிழிசல் பாய் ஒன்றில் உறங்கிப் போனான்.
வந்தவனைப்பற்றிய விவரம் தெரியாத அவள் விழித்தபோது அவனைப்பற்றி நாளை தெரிந்து கொள்வோம் என்றான் மார்ட்டீன். மறுநாள் விடிந்தது, வந்தவன் பேசவும் இல்லை. உணவுகொடுத்தபோது உண்டான். மறுப்பதில்லை. இரு நாட்கள் கழிந்தன. அவனை என்ன செய்வது?பெரும்பாரமாய் அவனை தொடர்ந்து ஆதரிப்பதா? செய்வதறியாது தயங்கிக் குழம்பி நின்றான். சரி ஒருவாரம் வைத்திருந்து வெளியே அனுப்பிவிடலாம் என்று நினைத்து தன் சுயவேலையினைத் தொடர ஆரம்பித்தான்.
சிறிய வீடாதலின் மார்ட்டீன் தோல் தொழில் வேலைசெய்யும்போது விருந்தினன் அருகிருந்து கவனித்துக் கொண்டிருந்தான். அவனது கவனம் தெளிவாக இருந்தது. அவன் கருவிகளை யெடுத்து தோலை கச்சிதமாக வெட்டி மார்ட்டீன் செய்யும் அளவுக்கு சுத்தமாகச் செய்யத் தலைப்பட்டான். மேலும் அவன் மார்டினையும் விட விரைவாகவும் சிறப்பாகவும் அழகாகவும் அற்புதமாகவும் வடிவமைத்து காலணிகள், பர்ஸ், கைப்பைகள் என்று வித விதமாக தைத்து குவித்தான். அவனுக்கு சோர்வும் இல்லை பேச்சும் இல்லை.சரி பிறவிச் செவிட்டு உமையனாகவிருப்பான் என்று முடிவுக்கு வந்தனர். உண்ணும் நேரத்தில் கொடுத்தால் குடிப்பான். தாமதமானாலும் ஏனென்று கேட்பதில்லை. புதியவனின் கையால் தயாரான பொருட்கள் மிக விரைவில் விற்றதோடு, நல்ல பெயரும் பெற்று, பொருளின் தரம் அனைவரையும் கவர்ந்தது.
மார்ட்டின் செல்வாக்கு உயர்ந்தது. களங்கமற்ற வந்தவன் குழந்தையற்ற இல்லத்திற்கு வரம் பெற்ற குழந்தையாக, வாழவைக்க வந்த தெய்வமாகக் கருதப்பட்டான். வசதிகள் பெருகிடச் செல்வம் செழிக்க மார்ட்டீன் பெரிய வர்த்தகனாயினான். அவனது தயாரிப்புகள் விரும்பி வாங்கப்பட்டன. பெரிய கடைத்தெருவில் அலங்கார பெட்டிவைத்து புதிய உத்திகளுடன் வணிகப் புகழோடு முக்கியமான ஒரு நபர் என வாழத் தலைப்பட்டான்.
இரண்டு வருடங்கள் கழிந்தன.
ஒருநாள் காலையில் ஒரு சீமாட்டி தன்னுடைய விலை மிகுந்த கோச்சு வண்டியில் மார்ட்டீன் கடைக்கு வந்தாள். அவள் அழைத்து வந்த இரு பெண் குழந்தைகளில் ஒருத்தியின் இடது காலில் சிறிது ஊனம் தென்பட்டது.
இருகுழந்தைகளும் அச்சில் வார்த்தது போன்று இருந்தனர். அழகின் முழுமைப் பிம்பங்களாய் இருந்தனர்.. குழந்தைகளின் கால் அளவுகளை எடுத்துக் கொண்டு வேலையைத் தொடங்கினான் இளைய பணியாளன்.. அழகிய வடிவில் சிரிய தோற்றத்துடன் காலணிகளைத் நேர்த்தியாகத் தைத்தான்.
இடைப்பட்ட நேரத்தில் வந்த சீமாட்டி மார்ட்டீனுடன் உரையாடிக் கொண்டிருந்தாள். தன் செல்வநிலை பற்றியும், தான் இளமையில் ஏற்பட்ட மணம்பற்றியும், கைவிட்டு இறந்த கணவன்பற்றியும், வாழ்வில் ஏற்பட்ட தனிமையும் பிறர் சூழ்ச்சியும் ,ஏற்படுத்திய வேதனை நிகழ்ச்சிகளையும் நினைவு கூர்ந்தாள். பின்னர் இக்குழந்தைகளைப் பற்றியும் பேசினாள் அனாதையாய் விடப்பட்டு தாயை இழந்த இவர்களைத் தான் எடுத்துவளர்த்து வருவதால் மட்டுமே உயிர்வாழ விரும்பியதாகவும் குறிப்பிட்டாள்.
அக்குழந்தைகளைப் பெற்ற ஒரு ஏழை பிரசவத்தின் போதே இறந்து போனதையும் அவளின் வறிய நிலையில் தான் அவளுக்கு உதவ நேர்ந்ததையும் குழந்தைகளை வளர்க்க வேண்டிய கடப்பாடு உருவானதையும் கூறினாள். அதுவே இன்று வாழ்வில் குறிக்கோளாக அமைந்தது பேரின்பம் என்றாள். முடித்து மெருகேற்றிய காலணிகளின் அமைப்பும் நேர்த்தியும் அனைவரையும் கவர்ந்தன. ஊனமான காலுக்கான காலணியும் மிகவும் கச்சிதமாக அமைந்ததில் சீமாட்டி உழைப்பாளியை மிகவும் பாராட்டி பரிசுகளுடன் சேர்த்து கூலியும் கொடுக்க முற்பட்டாள்.
காலணிகளுக்கான விலையை வாங்கவேண்டாம் என்று தன் சைகை மூலம் மார்டீனுக்குக் காட்டினான் இளையன். வேண்டுகோள் விடுத்த தன் இளையனை ஆச்சரியத்துடன் பார்த்தான் மார்ட்டீன். மறுத்தமைக்குக் காரணம் தெரியாவிட்டாலும் அவனுடைய விருப்பத்தை ஏற்று பலவந்தமாக சீமாட்டியின் கட்டாயத்தினைப் புறக்கணித்து, "இந்த இரண்டு ஆண்டுகளில் இன்று தான் நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். தன்னலம் பாராது என் குடும்பத்திற்காகவே உழைக்கும் இவனுடைய ஒரே ஒரு விருப்பமான செயல் இதுவே.
முதன் முறையாக இவனது உள்ளத்திலும் ஆசைகளும் இணக்கமும் உண்டு என்பதை உங்கள் குழந்தைகள் வருகை வாயிலாகத் தெரிந்து கொண்டேன். எனவே என்னை மன்னித்துவிடுங்கள் அடுத்து நீங்கள் வரும்போது நான் உங்களின் அன்புக் காணிக்கையை ஏற்றுக்கொள்வேன்" என்று வினயமாகப் பேசி இளையனின் விருப்பப்படி கூலி வாங்காமலேயே சீமாட்டியை வழியனுப்பிவைத்தான் மார்ட்டின்.
மேலும் இரு ஆண்டுகள் வேகமாகக் கழிந்தன. ஒருநாள் மாலை ஆடம்பரமாய் ஒரு செல்வந்தர் தன்னுடைய அருமையான கோச்வண்டியில் வந்து இறங்கி " மார்டீன் என்பவர் யார் ?"என்று கேட்டுக் கொண்டே உள்ளே வந்து அமர்ந்தார்.
உயர்ந்த உருவமும், கனத்த உடல் அமைப்பும், வாழ்க்கையின் செழுமையயும் முழுதுணர்ந்து நுகர்ந்த பெருமையும் அவர் முகத்தே தெற்றென விளங்கின. சுற்றமும் மற்றோரும் கைகட்டி நிற்கும் பெரியதொரு தலைமைப் பொறுப்பு வகிக்கும் உயர்மட்ட மனிதனாய் அவர் காணப்பட்டார். விலையுயர்ந்த ஆடை அணிகலன்களும் மிடுக்கும் அவரைப் பற்றிய பெருமையையும் அச்சத்தையும் தோற்றுவித்தன. அவருடம் வந்த பணியாளன் ஒரு பெரிய சுமையைக் கொண்டுவந்து மேசையின் மீது வைத்தான். அதில் ஒரு அழகான பதனிடப்பட்ட தோல் சுருள் இருந்தது.
"மார்டீன், உன்னுடைய வேலை நுணுக்கம் பரவலாய்ப் பேசப்படுவதால் உன்னை நாடி நான் வந்திருக்கின்றேன். நான் வேட்டைக்கு சென்றிருந்தபோது ஒரு அபூர்வமான மிருகத்தைப் பார்த்தேன். அது என்னைத் தாக்க வந்த போது தான் அதனை நான் முதன்முறையாகப் பார்த்தேன் அது ஒரு அதிசய ஆட்கொல்லி மிருகம். இடையே நடந்த போராட்டத்தில் பலமான காயங்களுடன் நான் வெறிகொண்ட அதனை அழித்து அதன் தோலை பதப்படுத்திப் பக்குவப்படுத்தச்செய்து கொண்டு வந்திருக்கின்றேன். உயரிய தன்மையுடனும் அழகிய வேலைப்பாடுகளுடனும் தரமான ஒரு ஜோடி பூட்ஸ் செய்யவேண்டும். இந்தத் தோல் மீண்டும் கிடைக்க வாய்ப்பே இன்மையால் போதிய கவனமும் கருத்தும் செலுத்தி சீர்ிய முறையில் அதைச் செய்து தரவேண்டும்.
நான்கு நாட்களில் இதோ இந்தப் பணியாளன் வருவான் அவனிடம் கொடுத்து அனுப்பிவிடு." கூலி என்னவென்பதைக் கேட்காமலேயே ஒரு பெருந்தொகைப் பணத்தை மேஜையின் மேல் வைத்தார் செல்வந்தப் பிரமுகர்.
அடாவடித்தனமானதும் அதிகாரவர்க்கத்தின் தன்நலம் மட்டுமே கருதும் பாங்கும் போக்கும் மார்ட்டீனுக்கு அறவே பிடிக்கவில்லை. இப்படிப் பட்டதொரு அதிகாரப் பணி இதுவரை நடந்ததே இன்மையால் மனம் வெதும்பிப் போய் வேலையை மறுக்கவும் அச்சம் கொண்டதுடன், அதை வெளிப்படுத்திக் கூறவும் துணிய முடியவில்லை. மறுத்துக் கூறி அவருடய கோபத்திற்கு ஆளானால் விளைவு என்னவாக இருக்கும் என்பதும் அவனது அச்சத்தை அதிகரிக்கச் செய்தது. மேலும் நேரடியாக மறுப்பதகு அச்சம் மட்டுமே காரணம் என்பது ஏற்றுக் கொள்ளமுடியாத ஒரு பேச்சு.
தயக்கத்துடன் இளையனின் முகத்தினைப் பார்த்தான் மார்ட்டின். அவனுடைய முகம் தெளிவாகவும் இருந்தது; மேலும் அவன் செல்வந்தரை நோக்கி ஒரு புன் முறுவலும் செய்தான். தன் முகம் நோக்கிய மார்ட்டீனிடம் வந்த வேலையை விட வேண்டாம் என்றும் வாங்கிப் போடுமாறும் நயனமொழியிலும், சைகையின் மூலமும் உணர்த்தினான். விடை பெறும் போது மீண்டும் வலியுறுத்தி பூட்ஸ் மிகவும் கச்சிதமாக அமையவேண்டும் என்றும் குறித்த நாளில் தவறாமல் தான் அனுப்பிவைக்கும் பனியாளன் வசம் தந்துவிடவேண்டும் என்றும் கட்டாயப்படுதி விட்டுச் சென்றார் செல்வந்தர்.
வந்த பிரமுகரின் பேச்சுக்களையும் தோரணையையும் அறவே வெறுத்த மார்ட்டீன் நடந்து முடிந்த சம்பவத்தையே அசைபோட்டுக் கொண்டிருந்தான். சற்று வெளியில் உலாவிவிட்டு திரும்பவந்த மார்ட்டினுக்கு தலையில் பேரிடி ஒன்று விழுந்துவிட்டாற் போன்றதோர் சம்பவம் அங்கு காத்திருந்தது.
செல்வந்தரின் அன்புக்குப் பாத்தியப்பட்ட பாடம் செய்யப்பட்டிருந்த அரிய பிராணியின் தோலினில் செல்வந்தருக்கான தரமான பூட்ஸ் செய்யப்படாமல் சாதாரண செருப்புகள் ஒரு ஜோடி மெருகேற்றி அலங்கார வேலைப்பாடுகளுடன் பணி நிறைவு செய்து அருமையாக கண்ணாடிப் பெட்டியில் காட்சிக்கு வைக்கப்பட்டதோடு அவரது முகவரி எழுதப்பட்டிருந்த ஓர் அட்டையையும் அதன் மேல் கோர்த்துக் கட்டப்பட்டிருந்தது.
நெருப்பினை மிதித்தது போன்று மார்ட்டீன் துவண்டுபோனான். நல்லவன், வல்லவன், வாழவழி வகுத்துத் தந்தவன், பேராளன்,தேடாமல் வந்தச் செல்வக்குமரன் என்றெல்லாம் யாரைப்பற்றி வந்தவர் போனவரிடமெல்லாம் வாயாரப் புகழ்ந்து கொண்டிருந்தானோ அந்த இளையன் தான் தோன்றித்தனமாய் செய்திருக்கும் செயல் மார்டீனுக்கு மிகவும் அச்சத்தைக் கொடுத்து காலடியினில் தரை விலகியதாக உணரத் தலைப் பட்டான்.
அவன் முன் நின்று கொண்டு,"ஏனடா நீ இங்கு என் வாழ்வினில் வந்தாய்? வறியநிலையினில் இருக்கும் போது நான் நிம்மதியாக விருந்தேன். வகையான வசதிக்கும் வாழ்வுக்கும் ஆளாக்கிப் பின்னர் மொத்தமாகக் என்னைக் குழி தோண்டிப் புதைக்கும் நோக்கம் உனக்கு எப்படியடா வந்தது? மக்கட் செல்வம் அற்ற எங்களுக்கு மகனாய் வந்தாய் என்று மதித்து இறுமாந்திருந்த எங்கள் குடும்பம் இன்றோடு அழிந்திட வழி வகுத்துத் தந்துவிட்டு ஏதும் அறியாதவன்போல் பேச்சு மூச்சற்று வாளாவிருக்கின்றாயே!. ஆழ்ந்து எங்கள் உரையடலை நீ வழக்கம் போல் கேட்டிருப்பாய் என்றுதான் எண்ணியிருந்தேன். வந்த கடுங்கோபி விரும்பிய தொன்றிருக்க வேண்டாத ஒன்றை வடிவமைத்துக் கொடுத்துவிட்டாயே? புரிதலில் தவறு நேர்ந்ததா, அன்றி நீ சரியாகப் புரிந்துகொண்டாயா என்பதை நான் சோதித்து அறியாதுவிட்டுவிட்டேனா? மாற்றுத் தோலும் எங்கிருந்தும் எப்படியும் பெறமுடியாத இச் சூழ்நிலையில் யாது செய்வேன்? தெய்வமே! ஊமையையும் செவிடனையும் நம்பி மோசம் போனேனே!" என்று புலம்பினான்.
என்னதான் திட்டிவைதாலும் அழுது புரண்டாலும் இளையனைப் பொறுத்தமட்டில் புரிந்து கொள்ள முடியாது என அவனுக்கு நன்கு தெரியும் என்றாலும் உபாயம் ஏதும் தெரியாமல் தலைவிதியென்று கூறும் நிலை இதுதான் போலும்! என்று நினைந்து கைகளை ஊன்றி மேசையின் மீது கவிழ்ந்தான்.
மனைவியை அழைத்துப் பேசினான். வீடு கடை அனைத்தையும் துறந்து இரவோடு இரவாக எங்கோ கண்காணாது போய்விடலாம் என்றும் பணியாளன் வந்து 'பூட்ஸ்-ஜோடி கேட்கும் போது இவனே இருந்து பதில் கூறிக்கொள்ளட்டும் எனத் திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளைச் செய்துமுடிக்க கணவனும் மனைவியும் இயங்க ஆரம்பித்தனர்.
வறுமையில் வாடியதும் எங்கிருந்தோ வந்த ஒருவனால் வாழ்வு தலை தூக்கி நிமிர்ந்துவும், இடைப்பட்ட காலத்தினில் வாழ்க்கையை வசதியாய் அமைத்து அதனைப் பாதியில் தட்டிப்பறித்ததுவும் நெஞ்சில் நிழலாட அத்தியாவசியப் பண்டங்களை சிறிது எடுத்து கொண்டு அதிகாலையில் பனி நீக்கும் அரசுத்துறை வாகனம் வந்து கதவு திறக்க வழிகிடைத்தவுடன் பிறர் அறியாது வெளியில் சென்றிட உத்தேசித்து செயலில் இறங்கினர் அத் தம்பதியர்.
வாயில் கதவு தட்டப்படும் ஒலி கேட்டது. யாரோ வாடிக்கையாளர் வந்திருப்பர் என்று வேண்டா வெறுப்புடன் மார்ட்டீன் எழுந்து கதவினைத் திறந்தான்.
அன்று தோல் சுருளைச் சுமந்து வந்த பணியாளன் கருத்து நெடிதுயர்ந்து நின்றான்.அவசர நிமித்தமாய் பரபரக்க இரண்டு நாட்களுக்கு முன்னமேயே வந்தது அவனுக்கு மேலும் பன்மடங்கு அதிர்ச்சியைத் தந்ததால் பொறியில் சிக்கிய எலிபோன்று அவன் திகைத்தான்.
வந்தவன் கேட்டான்" ஐயா பணி முடிந்து விட்டதா? மிகவும் அவசரத்தேவை என்பதால் ஓடோடி வந்துள்ளேன்." வாயிழந்து பேச்சிழந்து நாக்கு மேலணத்தில் ஒட்டிக் கொள்ள, பயத்தில் உறைந்து மார்ட்டீன் வந்தவனின் முகத்தையும் அதில் தோன்றும் பேரவசரக் குறிப்புகளையும், அவனால் விளையப் போகும் பிரளயத்தையும், குறித்த காலக் கெடுவிற்கு முன்னமேயே வந்து தன்னை ஒறுக்கப்போகும் பணியாளன் வடிவில் கூற்றுவனே வந்துள்ளதாக நினைந்து பேயறைபட்டவன் போன்று பதில் ஏதும் இல்லாதவனாக மலங்க மலங்க விழித்தான்.
ஐயா என் அவசரம் உங்களுக்குப் புரியவில்லையா? காரியங்கள் மிஞ்சிவிட்டன. கனவான் இறந்து போய்விட்டார். அவரின் புனித உடல் மாதாகோயில் முற்றத்தில் காத்திருக்கின்றது. நல்லடக்கம் நிகழ்வதற்காக என்னை எதிர்பார்த்து அங்கே உற்றாரும் மற்றோரும் குழுமியுள்ளானர். அவர் ஆசையாக அணிவதற்காகச் செய்யப்பட்டுள்ள புதிய பூட்ஸ் ஜோடியினை வெளியே எடுத்து அதனைப் பிரித்து சாதாரணச் செருப்பாக அதே அளவினில் மாற்றிக் கொடுங்கள். உங்கள் பணியினைத் துரிதப்படுத்தி நான் விரைந்து சென்றடைய தயவு கூர்ந்து விரைந்து செயற்படுங்கள். அளவிறந்த பணிகள் அங்கே தேங்கியுள்ளன" என்றான் பணியாள்.
மார்ட்டீன் கவனம் திரும்பி அவன் கூறிய சொற்களின் முழுமையினைப் புரிந்து கொள்ள சற்று அவகாசம் தேவைப்பட்டது. அதற்குள் உள்ளிருந்து வந்த மார்டினின் வளர்ப்பு மகன் அலங்காரப் பெட்டகத்தினின்றும் ஒரு ஜோடி உரிய புதிய செருப்பை யெடுத்து வந்திருந்தவனிடம் காட்டிக் கொண்டிருக்கும் போதே கைகளினின்றும் அதைப் பறித்துகொண்டு ஓடிப் போக விழைந்தவன் போல் வந்திருந்த பணியாளன் ஏற்கனவே அது ஒரு பணி முடிந்த பொருட்கள் வரிசையில் அடைக்கலம் புகுந்திருந்ததைப் பார்த்து, அது முடிக்கப்பட்டு சில நாட்கள் ஆகிவிட்டன என்பதை எண்ணித் திகைத்தான்.
ஏதும் புரியாத மர்மக் கும்பலுக்குள் சிக்கிக் கொண்டது போன்று ஒவ்வொருவரையும் ஏற இறங்கப் பார்த்ததோடன்றி நீண்ட விடை கூறிவிட்டு அவசர நிமித்தமாய்ப் பறந்தான். நடப்பனவெல்லாம் என்ன? மார்ட்டினின் மனைவியும் வந்து சேர்ந்தாள்.
பூட்ஸை மாற்றித் தைக்க நேரம் பிடிக்கும் என்று வந்தவன் நினைத்திருக்க அதை முன் கூட்டியே செருப்பாய்த் தைத்துப் போட்ட வளர்ப்பு மகனை அச்சத்துடன் நோக்கினான் மார்ட்டீன்.
நடந்த நிகழ்வும் வந்தவன் கூறிய மரணச் செய்தியும், எவ்வித உணர்வும் அற்றவன், எதையுமே புரியமாட்டாதவன் என்று தான் நினைத்திருந்த மூங்கை யார்? அவனால் இத்துணை வசைமொழிகளை எவ்வாறு தாங்கிக் கொள்ள முடிந்தது? அனைத்தும் புரிந்தவனா? இப்பெற்றியுடையவனைத் தரந்தாழ்த்தி விட்டோமா? என்று கழிவிரக்கம் கொண்டு நொந்தான் மார்ட்டீன்.
ஓடிச் டென்று இளைஞனைக் கட்டிப் பிடித்துக்கொண்டு 'ஹோ' வென்று அழுது விம்மினான் மார்ட்டீன். கண்ணீர் சொரிய நின்றுகொண்டிருந்த மார்டீனின் மனைவி மகனின் கைகள் இரண்டையும் பிடித்துக் கொண்டு கதறி அழுதாள். உப்பற்றுக் கொடுத்தாலும் மருக்காது வாங்கி உண்ட அவனின் பெருந்தன்மையை அவள் நினைந்தாள்.
இனிய சங்கீத ஒலியினில் அன்பையும் கனிவையும் இழைத்து ஆதார ஸ்ருதி வருடலைத் தரும் தொனியில் "மார்ட்டீன்" என்று யாரோ கிணற்றுக்குள் இருந்து அழைப்பதுபோன்று ஒரு குரல் கேட்டது.
வெளியே வானம் கருத்து இடியும் மின்னலும் மழையும் மிகுந்து புயற்காற்றின் கடுமையால் சன்னல்திரைகளைக் கிழித்து படபட என்று கதவுகள் அடித்து ஒருவர் பேசுவது பிறருக்குக் கேட்க்காத வண்ணம் இரைச்சல் அதிகரித்தமைால் என்ன நடக்கின்றது என்பது எவரும் அனுமானிக்க முடியாமல் கலப்படமாக பேரிரைச்சல் மட்டுமே நிறைந்திருந்தது.
அத்தனை பேரிரைச்சலுக்கு மத்தியில் ஒரு இனிய சுனாதம் அனைத்து ஒலிகளையும் ஆழத்தின் கீழமுக்கி, வெள்ளத்தில் எதிர் நீச்சல் செய்யும் கருநாகம் போல் துல்லியமாக , ஆனால் மிக கூர்மையான மகுடி நாதம் போன்று சுண்டி இழுத்து மதுரமாய் ஒலித்தது. "அன்புடைய மார்ட்டீன்". குரல் வந்த அறையின் வடகிழக்கு மூலையினில் புதியவன் ஒருவன் நின்றிருந்தான்.
பொன் பஞ்சுப் பொதியலாய் ஒளி உமிழும் தாரகையாய், அன்பின் வடிவாய், அடைக்கலம் தரும் நற்கருணைப் பேராறாய் அவன் வசீகரித்து நின்று கொண்டு இருகை நீட்டி மார்ட்டீனை அழைத்தான். சுயம் அற்றுப் போய் பேரலையில் அல்லாடும் மரக்கட்டையென தள்ளாடி நின்ற மார்ட்டீன் மதுர வாசக அழைப்பின் விசையில் காந்தத்தால் ஈர்க்கப் பட்ட இரும்புத்துண்டு போன்று அவன் முன் கைகட்டி வாய் புதைத்து வணங்கி நின்றான். அவன் பின்புறத்தே அவனது மனைவியும் உள்ளீீடற்றுப் போய் நடைப் பிணமாய் நின்றுகொண்டு உரையாடலைச் செவிமடுத்தாள்.
"என்னை நன்கு பார் மார்ட்டீன். நீங்கள் இருவரும் இறைவனால் ஆசீர்வதிக்கப் பட்டவர்கள்.உங்கள் இருவரிடமும் பயிற்சி பெறும் மாணவனாகச் சில ஆண்டுகள் தங்கிப் பழகித் தவம் புரிந்து கண்டறியாதன கண்டேன்.
நான் கற்றுக்கொண்டவை இயற்கையின் சாரம். அன்புத் தெய்வம் போன்று என்னை ஆதரித்தீர்கள். பயிற்சிமுடிந்தமையின் நான் உங்களைவிட்டு செல்கின்றேன்.எனக்கு விடை கொடுங்கள். உங்கள் வாழ்வு மேலும் சிறக்க நான் இறைவன் அருள் வேண்டிப் பிரார்த்திக்கின்றேன்." என்றான், கருமை நிறம் மறைந்து தெய்வீக ஒளிசூழ நின்றுகொண்டிருந்த அத் தேவதூதன்.
பேரிடராய், மரணவாயிலுக்கு இட்டுச்செல்லும் ஒரு சம்பவம் திசைமாறி கற்பனைக்கும் எட்டாத வகையில் எங்கோ தடம்பதித்துச் செல்வது வேடிக்கையாகவும் புரியாமலுமிருந்தது. மார்ட்டீன் சொன்னான்.
"ஐயா! நீங்கள் பேசுவதெல்லாம் என் சிற்றறிவுக்கு எட்டாத, விளங்காத புதிர்கள். விவரித்துக் கூறினாலும் அறிந்து கொள்ளவியலாதவை. எனக்கு ஒரு சிறுதகவல் மட்டும் சொல்லுங்கள். நீங்கள் யார்? தெய்வீகத் தோற்றம் இப்போது உங்களிடம் வரக்காரணம் யாது? அன்று அனாதையாய் வீழ்ந்துகிடந்த மர்மம் என்ன? ஏழையின் வீட்டில் அரைப்பட்டினியுடன் சில ஆண்டுகள் ஏன் தங்கியிருக்கவேண்டிய தாயிற்று? இங்கு பயிற்சி பெற்றதாகச் சொன்னது என்ன? வறுமையின் பிடியில் சிக்கிய தோல் தொழிலாளியின் அடிமையாய்க் காட்சிதந்து உழன்று என்னையும் அதிரப் பேச வைத்து ஒன்றுமே அறியாத ஊமையாய் நடந்த நாடகத்தில் கண்ட முடிவென்ன? "
நெகிழ்வான உண்மை உரிமையுடன் மாட்டீனின் கேள்விகளுக்கு மனமுவந்து அத் தேவ தூதன் கடமையாய்க் கொண்டு பதிலிறுத்தான். "எனதருமை மார்ட்டீன்! நான் விரைந்து சென்று இறைவன் பால் என் வணக்கத்தைத் தெரிவித்து என்பணியினைத் தொடர வேண்டும். என்றாலும் உண்மையின் தேடலாய் களங்கமற்ற உங்கள் ஐயங்களைத் தவிர்ப்பது என்கடமையாகும்" சற்று நிறுத்தி மீண்டும் அவன் சொன்னான்.
" அன்று வந்த இரட்டையர் சிறுமிகள் நினைவிருக்கிற தன்றோ? அக்குழந்தைகளின் தாயின் உயிர் பிரியவேண்டிய அன்னாளில் அவள் மரணத்துடன் போராடித் தவித்தாள். அவள் படும் அவஸ்தைகளை நேரில் பார்த்து உயிரைக் கவர்ந்து செல்ல வந்த நான் புதியதாய்ப் பிறந்த இரட்டைக்குழவிகள் தனிமைப்பட்டு இவ்வுலகில் அழிந்து போகும் என்று கருதி கருணை காட்டித் தாயின் உயிரைச் சிலகாலம் விட்டுவைக் கலாகுமா வென்று வேண்டுகோளை இறைவனனின்முன் வைத்தேன். அதற்கு இறைவன் திட்டமிட்டபடி வேறு ஒரு தூதனை அனுப்பி அத்தாயின் உயிரை எடுத்து வரச்செய்துடன் என்னைச் சபித்து," நீ பூவுலகில் சிலகாலம் தங்கி, உலகம் எதனால் நிலைபெற்றிருக்கின்றது? மனிதர்களுக்கு என்ன கொடுக்கப்பட்டிருக்கின்றது? என்ன கொடுக்கப்படவில்லை? என்பதை அறிந்துகொண்டு வந்துசேர்வாயாக என்று கூறவும் தெய்வீக ஆற்றல் குறைந்து நான் மாதாகோயில் முற்றத்தில் வீழ்ந்தேன்."
தேவதூதன் மேலும் தொடர்ந்தான்," கருணையோடு உன் மனைவி எனக்கு அன்று ஓட்ஸ் கஞ்சி தரும்போது என் நண்பன் உடன் நின்று கொண்டிருந்தான்.அவன் முகம் பார்த்து முறுவலித்தேன். அன்றையத் தேர்வில் அவள் கண்டம் தப்பித்தாள். அக்கருணை பிறக்கவில்லையெனின் அவளின் உயிர் அன்று பறிபோயிருக்கும்."
"குழந்தைகட்குக் காலணிதைக்கவந்த சீமாட்டி தாயினு மேலாக அக்குழந்தைகளை ஆதரித்து அன்புகாட்டிச் செல்வச் சிறப்புடன் பராமரித்து வருகிறாள் என்பதை இறைவன் எனக்குக் காட்டியருளினார். அத்தாய் பிழைத்திருந்தால் அச்சிறுமிகள் வறுமையிலேயேதான் வாடியிருப்பார்கள்."
"உலகையே விலை பேசும் செல்வப்பிரமுகரின் கோச்சிலேயே நண்பன் வரக்கண்டேன். சற்று நேரத்தில் உயிர் பிரியும் தன்மை நெருங்கிவந்துள்ளமை அறியாத அவர் வேட்டைப் பிராணியின் நிலையையும் பூட்ஸ் விரும்புவதையும் ஆரவாரமாகத்தெரிவித்து வாங்கிச் செல்லக் கெடுவைத்துப் பேசினார். அவர் இறக்கும்போது அவருக்கு பூட்ஸ் அணிவித்து நல்லடக்கம் செய்யப் போவதில்லை. அவர் விருப்பத்திற்கு மாறாக செருப்பு மட்டுமே வழக்கமுறைமைப்படி தேவை யென்பதால் செருப்பைத் தைத்துப் போட்டேன்."
"உலகம் அன்பினால் நிலை பெற்றிருக்கின்றது என்பதையும், அன்புகூர்ந்து பிறருக்குத் தொண்டு புரியும் தன்மை மக்களுக்குக் கொடுக்கப்பட்ட செல்வம் என்பதையும், மரணம் என்று எப்படி சம்பவிக்குமென்று அறிய முடியாதவாறு இறைவனால் மறைக்கப்பட்டிருக்கின்றது என்பதையும் உங்களுடன் வசிக்கும் போது நான் அறிந்து கொண்ட பாடம்" என்று கூறிவிட்டு விடைபெற்றுச் சென்றான் தேவதூதன்.
இக்கதை நிகழ்ந்த புலம் மாஸ்கோ. மார்டீன் ஒரு செம்மான், ஏழை. குறைந்த வருவாயில் வாழ்ந்து வருபவன். மனைவியின் தேவைக்காக 'பர்' கோட் ஒன்று வாங்க விழைந்து இயலாமையால், அதற்குப் போதிய பண வசதி(ரூபிள்) இன்மையால் கொஞ்சம் ரொட்டி வாங்கிக் கொண்டு விட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தான்.
வழியில் இருந்த சர்ச் முற்றத்தின் ஊடாக நுழைந்து அந்தி மாலைப் பொழுதில் வந்து கொண்டிருந்த போது யாரோ முக்கி முனகும் சப்தம் கேட்டது. முகம் தெரியாதபடி பனி பெய்துகொண்டிருந்ததால் சற்று நெருங்கி அவன் சென்றுபார்த்தான்.
இளைஞன் ஒருவன் அரைகுறை உடையுடன் அங்கே விழுந்து பனியில் விரைத்துச் சுருண்டு கிடந்தான். இரக்கமும் கருணையும் மேலிட தன் மீது அணிந்து கொண்டிருந்த நீண்ட மேலங்கியைக் கழற்றி அந்த இளைஞனை அணைத்துத் தூக்கி அணிவித்து ஒரு வாடகை வண்டியில் ஏற்றித் தன்வீட்டிற்கு அழைத்து வந்தான்.
தன் குடும்பத்துக்கே பத்தாத நிலையில் வேற்றுநபர் ஒருவரை விருந்தாக அழைத்து வருவது என்ன விபரீத விளைவுகளை ஏற்படுத்தும் என்பது அவனுக்கு நன்கு தெரியும். மனைவியின் மன நிலையைப் பற்றியும் எதிர்வினைகள் பற்றியும் யோசித்தான்.
வீட்டு வாயிலில் கணவனுடன் விருந்தாளி ஒருவனைப் பார்த்த அவள் அன்று ஏனோ வழக்கத்துக்கு மாறாக அமைதியாய் நடந்துகொண்டதோடன்றி அவனது உணவிற்காக எக்கேள்வியும் எழுப்பாமல் ஓட்ஸ் கஞ்சி தயாரித்து சூடாகக் கொடுத்தாள். சோர்வுற்றிருந்த விருந்தாளி பேச்சு மூச்சின்றி இருந்தவன் அவளது முகத்தைப் பார்த்து ஒருஇளநகை செய்துவிட்டு கஞ்சியைக் குடித்தான். கிழிசல் பாய் ஒன்றில் உறங்கிப் போனான்.
வந்தவனைப்பற்றிய விவரம் தெரியாத அவள் விழித்தபோது அவனைப்பற்றி நாளை தெரிந்து கொள்வோம் என்றான் மார்ட்டீன். மறுநாள் விடிந்தது, வந்தவன் பேசவும் இல்லை. உணவுகொடுத்தபோது உண்டான். மறுப்பதில்லை. இரு நாட்கள் கழிந்தன. அவனை என்ன செய்வது?பெரும்பாரமாய் அவனை தொடர்ந்து ஆதரிப்பதா? செய்வதறியாது தயங்கிக் குழம்பி நின்றான். சரி ஒருவாரம் வைத்திருந்து வெளியே அனுப்பிவிடலாம் என்று நினைத்து தன் சுயவேலையினைத் தொடர ஆரம்பித்தான்.
சிறிய வீடாதலின் மார்ட்டீன் தோல் தொழில் வேலைசெய்யும்போது விருந்தினன் அருகிருந்து கவனித்துக் கொண்டிருந்தான். அவனது கவனம் தெளிவாக இருந்தது. அவன் கருவிகளை யெடுத்து தோலை கச்சிதமாக வெட்டி மார்ட்டீன் செய்யும் அளவுக்கு சுத்தமாகச் செய்யத் தலைப்பட்டான். மேலும் அவன் மார்டினையும் விட விரைவாகவும் சிறப்பாகவும் அழகாகவும் அற்புதமாகவும் வடிவமைத்து காலணிகள், பர்ஸ், கைப்பைகள் என்று வித விதமாக தைத்து குவித்தான். அவனுக்கு சோர்வும் இல்லை பேச்சும் இல்லை.சரி பிறவிச் செவிட்டு உமையனாகவிருப்பான் என்று முடிவுக்கு வந்தனர். உண்ணும் நேரத்தில் கொடுத்தால் குடிப்பான். தாமதமானாலும் ஏனென்று கேட்பதில்லை. புதியவனின் கையால் தயாரான பொருட்கள் மிக விரைவில் விற்றதோடு, நல்ல பெயரும் பெற்று, பொருளின் தரம் அனைவரையும் கவர்ந்தது.
மார்ட்டின் செல்வாக்கு உயர்ந்தது. களங்கமற்ற வந்தவன் குழந்தையற்ற இல்லத்திற்கு வரம் பெற்ற குழந்தையாக, வாழவைக்க வந்த தெய்வமாகக் கருதப்பட்டான். வசதிகள் பெருகிடச் செல்வம் செழிக்க மார்ட்டீன் பெரிய வர்த்தகனாயினான். அவனது தயாரிப்புகள் விரும்பி வாங்கப்பட்டன. பெரிய கடைத்தெருவில் அலங்கார பெட்டிவைத்து புதிய உத்திகளுடன் வணிகப் புகழோடு முக்கியமான ஒரு நபர் என வாழத் தலைப்பட்டான்.
இரண்டு வருடங்கள் கழிந்தன.
ஒருநாள் காலையில் ஒரு சீமாட்டி தன்னுடைய விலை மிகுந்த கோச்சு வண்டியில் மார்ட்டீன் கடைக்கு வந்தாள். அவள் அழைத்து வந்த இரு பெண் குழந்தைகளில் ஒருத்தியின் இடது காலில் சிறிது ஊனம் தென்பட்டது.
இருகுழந்தைகளும் அச்சில் வார்த்தது போன்று இருந்தனர். அழகின் முழுமைப் பிம்பங்களாய் இருந்தனர்.. குழந்தைகளின் கால் அளவுகளை எடுத்துக் கொண்டு வேலையைத் தொடங்கினான் இளைய பணியாளன்.. அழகிய வடிவில் சிரிய தோற்றத்துடன் காலணிகளைத் நேர்த்தியாகத் தைத்தான்.
இடைப்பட்ட நேரத்தில் வந்த சீமாட்டி மார்ட்டீனுடன் உரையாடிக் கொண்டிருந்தாள். தன் செல்வநிலை பற்றியும், தான் இளமையில் ஏற்பட்ட மணம்பற்றியும், கைவிட்டு இறந்த கணவன்பற்றியும், வாழ்வில் ஏற்பட்ட தனிமையும் பிறர் சூழ்ச்சியும் ,ஏற்படுத்திய வேதனை நிகழ்ச்சிகளையும் நினைவு கூர்ந்தாள். பின்னர் இக்குழந்தைகளைப் பற்றியும் பேசினாள் அனாதையாய் விடப்பட்டு தாயை இழந்த இவர்களைத் தான் எடுத்துவளர்த்து வருவதால் மட்டுமே உயிர்வாழ விரும்பியதாகவும் குறிப்பிட்டாள்.
அக்குழந்தைகளைப் பெற்ற ஒரு ஏழை பிரசவத்தின் போதே இறந்து போனதையும் அவளின் வறிய நிலையில் தான் அவளுக்கு உதவ நேர்ந்ததையும் குழந்தைகளை வளர்க்க வேண்டிய கடப்பாடு உருவானதையும் கூறினாள். அதுவே இன்று வாழ்வில் குறிக்கோளாக அமைந்தது பேரின்பம் என்றாள். முடித்து மெருகேற்றிய காலணிகளின் அமைப்பும் நேர்த்தியும் அனைவரையும் கவர்ந்தன. ஊனமான காலுக்கான காலணியும் மிகவும் கச்சிதமாக அமைந்ததில் சீமாட்டி உழைப்பாளியை மிகவும் பாராட்டி பரிசுகளுடன் சேர்த்து கூலியும் கொடுக்க முற்பட்டாள்.
காலணிகளுக்கான விலையை வாங்கவேண்டாம் என்று தன் சைகை மூலம் மார்டீனுக்குக் காட்டினான் இளையன். வேண்டுகோள் விடுத்த தன் இளையனை ஆச்சரியத்துடன் பார்த்தான் மார்ட்டீன். மறுத்தமைக்குக் காரணம் தெரியாவிட்டாலும் அவனுடைய விருப்பத்தை ஏற்று பலவந்தமாக சீமாட்டியின் கட்டாயத்தினைப் புறக்கணித்து, "இந்த இரண்டு ஆண்டுகளில் இன்று தான் நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். தன்னலம் பாராது என் குடும்பத்திற்காகவே உழைக்கும் இவனுடைய ஒரே ஒரு விருப்பமான செயல் இதுவே.
முதன் முறையாக இவனது உள்ளத்திலும் ஆசைகளும் இணக்கமும் உண்டு என்பதை உங்கள் குழந்தைகள் வருகை வாயிலாகத் தெரிந்து கொண்டேன். எனவே என்னை மன்னித்துவிடுங்கள் அடுத்து நீங்கள் வரும்போது நான் உங்களின் அன்புக் காணிக்கையை ஏற்றுக்கொள்வேன்" என்று வினயமாகப் பேசி இளையனின் விருப்பப்படி கூலி வாங்காமலேயே சீமாட்டியை வழியனுப்பிவைத்தான் மார்ட்டின்.
மேலும் இரு ஆண்டுகள் வேகமாகக் கழிந்தன. ஒருநாள் மாலை ஆடம்பரமாய் ஒரு செல்வந்தர் தன்னுடைய அருமையான கோச்வண்டியில் வந்து இறங்கி " மார்டீன் என்பவர் யார் ?"என்று கேட்டுக் கொண்டே உள்ளே வந்து அமர்ந்தார்.
உயர்ந்த உருவமும், கனத்த உடல் அமைப்பும், வாழ்க்கையின் செழுமையயும் முழுதுணர்ந்து நுகர்ந்த பெருமையும் அவர் முகத்தே தெற்றென விளங்கின. சுற்றமும் மற்றோரும் கைகட்டி நிற்கும் பெரியதொரு தலைமைப் பொறுப்பு வகிக்கும் உயர்மட்ட மனிதனாய் அவர் காணப்பட்டார். விலையுயர்ந்த ஆடை அணிகலன்களும் மிடுக்கும் அவரைப் பற்றிய பெருமையையும் அச்சத்தையும் தோற்றுவித்தன. அவருடம் வந்த பணியாளன் ஒரு பெரிய சுமையைக் கொண்டுவந்து மேசையின் மீது வைத்தான். அதில் ஒரு அழகான பதனிடப்பட்ட தோல் சுருள் இருந்தது.
"மார்டீன், உன்னுடைய வேலை நுணுக்கம் பரவலாய்ப் பேசப்படுவதால் உன்னை நாடி நான் வந்திருக்கின்றேன். நான் வேட்டைக்கு சென்றிருந்தபோது ஒரு அபூர்வமான மிருகத்தைப் பார்த்தேன். அது என்னைத் தாக்க வந்த போது தான் அதனை நான் முதன்முறையாகப் பார்த்தேன் அது ஒரு அதிசய ஆட்கொல்லி மிருகம். இடையே நடந்த போராட்டத்தில் பலமான காயங்களுடன் நான் வெறிகொண்ட அதனை அழித்து அதன் தோலை பதப்படுத்திப் பக்குவப்படுத்தச்செய்து கொண்டு வந்திருக்கின்றேன். உயரிய தன்மையுடனும் அழகிய வேலைப்பாடுகளுடனும் தரமான ஒரு ஜோடி பூட்ஸ் செய்யவேண்டும். இந்தத் தோல் மீண்டும் கிடைக்க வாய்ப்பே இன்மையால் போதிய கவனமும் கருத்தும் செலுத்தி சீர்ிய முறையில் அதைச் செய்து தரவேண்டும்.
நான்கு நாட்களில் இதோ இந்தப் பணியாளன் வருவான் அவனிடம் கொடுத்து அனுப்பிவிடு." கூலி என்னவென்பதைக் கேட்காமலேயே ஒரு பெருந்தொகைப் பணத்தை மேஜையின் மேல் வைத்தார் செல்வந்தப் பிரமுகர்.
அடாவடித்தனமானதும் அதிகாரவர்க்கத்தின் தன்நலம் மட்டுமே கருதும் பாங்கும் போக்கும் மார்ட்டீனுக்கு அறவே பிடிக்கவில்லை. இப்படிப் பட்டதொரு அதிகாரப் பணி இதுவரை நடந்ததே இன்மையால் மனம் வெதும்பிப் போய் வேலையை மறுக்கவும் அச்சம் கொண்டதுடன், அதை வெளிப்படுத்திக் கூறவும் துணிய முடியவில்லை. மறுத்துக் கூறி அவருடய கோபத்திற்கு ஆளானால் விளைவு என்னவாக இருக்கும் என்பதும் அவனது அச்சத்தை அதிகரிக்கச் செய்தது. மேலும் நேரடியாக மறுப்பதகு அச்சம் மட்டுமே காரணம் என்பது ஏற்றுக் கொள்ளமுடியாத ஒரு பேச்சு.
தயக்கத்துடன் இளையனின் முகத்தினைப் பார்த்தான் மார்ட்டின். அவனுடைய முகம் தெளிவாகவும் இருந்தது; மேலும் அவன் செல்வந்தரை நோக்கி ஒரு புன் முறுவலும் செய்தான். தன் முகம் நோக்கிய மார்ட்டீனிடம் வந்த வேலையை விட வேண்டாம் என்றும் வாங்கிப் போடுமாறும் நயனமொழியிலும், சைகையின் மூலமும் உணர்த்தினான். விடை பெறும் போது மீண்டும் வலியுறுத்தி பூட்ஸ் மிகவும் கச்சிதமாக அமையவேண்டும் என்றும் குறித்த நாளில் தவறாமல் தான் அனுப்பிவைக்கும் பனியாளன் வசம் தந்துவிடவேண்டும் என்றும் கட்டாயப்படுதி விட்டுச் சென்றார் செல்வந்தர்.
வந்த பிரமுகரின் பேச்சுக்களையும் தோரணையையும் அறவே வெறுத்த மார்ட்டீன் நடந்து முடிந்த சம்பவத்தையே அசைபோட்டுக் கொண்டிருந்தான். சற்று வெளியில் உலாவிவிட்டு திரும்பவந்த மார்ட்டினுக்கு தலையில் பேரிடி ஒன்று விழுந்துவிட்டாற் போன்றதோர் சம்பவம் அங்கு காத்திருந்தது.
செல்வந்தரின் அன்புக்குப் பாத்தியப்பட்ட பாடம் செய்யப்பட்டிருந்த அரிய பிராணியின் தோலினில் செல்வந்தருக்கான தரமான பூட்ஸ் செய்யப்படாமல் சாதாரண செருப்புகள் ஒரு ஜோடி மெருகேற்றி அலங்கார வேலைப்பாடுகளுடன் பணி நிறைவு செய்து அருமையாக கண்ணாடிப் பெட்டியில் காட்சிக்கு வைக்கப்பட்டதோடு அவரது முகவரி எழுதப்பட்டிருந்த ஓர் அட்டையையும் அதன் மேல் கோர்த்துக் கட்டப்பட்டிருந்தது.
நெருப்பினை மிதித்தது போன்று மார்ட்டீன் துவண்டுபோனான். நல்லவன், வல்லவன், வாழவழி வகுத்துத் தந்தவன், பேராளன்,தேடாமல் வந்தச் செல்வக்குமரன் என்றெல்லாம் யாரைப்பற்றி வந்தவர் போனவரிடமெல்லாம் வாயாரப் புகழ்ந்து கொண்டிருந்தானோ அந்த இளையன் தான் தோன்றித்தனமாய் செய்திருக்கும் செயல் மார்டீனுக்கு மிகவும் அச்சத்தைக் கொடுத்து காலடியினில் தரை விலகியதாக உணரத் தலைப் பட்டான்.
அவன் முன் நின்று கொண்டு,"ஏனடா நீ இங்கு என் வாழ்வினில் வந்தாய்? வறியநிலையினில் இருக்கும் போது நான் நிம்மதியாக விருந்தேன். வகையான வசதிக்கும் வாழ்வுக்கும் ஆளாக்கிப் பின்னர் மொத்தமாகக் என்னைக் குழி தோண்டிப் புதைக்கும் நோக்கம் உனக்கு எப்படியடா வந்தது? மக்கட் செல்வம் அற்ற எங்களுக்கு மகனாய் வந்தாய் என்று மதித்து இறுமாந்திருந்த எங்கள் குடும்பம் இன்றோடு அழிந்திட வழி வகுத்துத் தந்துவிட்டு ஏதும் அறியாதவன்போல் பேச்சு மூச்சற்று வாளாவிருக்கின்றாயே!. ஆழ்ந்து எங்கள் உரையடலை நீ வழக்கம் போல் கேட்டிருப்பாய் என்றுதான் எண்ணியிருந்தேன். வந்த கடுங்கோபி விரும்பிய தொன்றிருக்க வேண்டாத ஒன்றை வடிவமைத்துக் கொடுத்துவிட்டாயே? புரிதலில் தவறு நேர்ந்ததா, அன்றி நீ சரியாகப் புரிந்துகொண்டாயா என்பதை நான் சோதித்து அறியாதுவிட்டுவிட்டேனா? மாற்றுத் தோலும் எங்கிருந்தும் எப்படியும் பெறமுடியாத இச் சூழ்நிலையில் யாது செய்வேன்? தெய்வமே! ஊமையையும் செவிடனையும் நம்பி மோசம் போனேனே!" என்று புலம்பினான்.
என்னதான் திட்டிவைதாலும் அழுது புரண்டாலும் இளையனைப் பொறுத்தமட்டில் புரிந்து கொள்ள முடியாது என அவனுக்கு நன்கு தெரியும் என்றாலும் உபாயம் ஏதும் தெரியாமல் தலைவிதியென்று கூறும் நிலை இதுதான் போலும்! என்று நினைந்து கைகளை ஊன்றி மேசையின் மீது கவிழ்ந்தான்.
மனைவியை அழைத்துப் பேசினான். வீடு கடை அனைத்தையும் துறந்து இரவோடு இரவாக எங்கோ கண்காணாது போய்விடலாம் என்றும் பணியாளன் வந்து 'பூட்ஸ்-ஜோடி கேட்கும் போது இவனே இருந்து பதில் கூறிக்கொள்ளட்டும் எனத் திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளைச் செய்துமுடிக்க கணவனும் மனைவியும் இயங்க ஆரம்பித்தனர்.
வறுமையில் வாடியதும் எங்கிருந்தோ வந்த ஒருவனால் வாழ்வு தலை தூக்கி நிமிர்ந்துவும், இடைப்பட்ட காலத்தினில் வாழ்க்கையை வசதியாய் அமைத்து அதனைப் பாதியில் தட்டிப்பறித்ததுவும் நெஞ்சில் நிழலாட அத்தியாவசியப் பண்டங்களை சிறிது எடுத்து கொண்டு அதிகாலையில் பனி நீக்கும் அரசுத்துறை வாகனம் வந்து கதவு திறக்க வழிகிடைத்தவுடன் பிறர் அறியாது வெளியில் சென்றிட உத்தேசித்து செயலில் இறங்கினர் அத் தம்பதியர்.
வாயில் கதவு தட்டப்படும் ஒலி கேட்டது. யாரோ வாடிக்கையாளர் வந்திருப்பர் என்று வேண்டா வெறுப்புடன் மார்ட்டீன் எழுந்து கதவினைத் திறந்தான்.
அன்று தோல் சுருளைச் சுமந்து வந்த பணியாளன் கருத்து நெடிதுயர்ந்து நின்றான்.அவசர நிமித்தமாய் பரபரக்க இரண்டு நாட்களுக்கு முன்னமேயே வந்தது அவனுக்கு மேலும் பன்மடங்கு அதிர்ச்சியைத் தந்ததால் பொறியில் சிக்கிய எலிபோன்று அவன் திகைத்தான்.
வந்தவன் கேட்டான்" ஐயா பணி முடிந்து விட்டதா? மிகவும் அவசரத்தேவை என்பதால் ஓடோடி வந்துள்ளேன்." வாயிழந்து பேச்சிழந்து நாக்கு மேலணத்தில் ஒட்டிக் கொள்ள, பயத்தில் உறைந்து மார்ட்டீன் வந்தவனின் முகத்தையும் அதில் தோன்றும் பேரவசரக் குறிப்புகளையும், அவனால் விளையப் போகும் பிரளயத்தையும், குறித்த காலக் கெடுவிற்கு முன்னமேயே வந்து தன்னை ஒறுக்கப்போகும் பணியாளன் வடிவில் கூற்றுவனே வந்துள்ளதாக நினைந்து பேயறைபட்டவன் போன்று பதில் ஏதும் இல்லாதவனாக மலங்க மலங்க விழித்தான்.
ஐயா என் அவசரம் உங்களுக்குப் புரியவில்லையா? காரியங்கள் மிஞ்சிவிட்டன. கனவான் இறந்து போய்விட்டார். அவரின் புனித உடல் மாதாகோயில் முற்றத்தில் காத்திருக்கின்றது. நல்லடக்கம் நிகழ்வதற்காக என்னை எதிர்பார்த்து அங்கே உற்றாரும் மற்றோரும் குழுமியுள்ளானர். அவர் ஆசையாக அணிவதற்காகச் செய்யப்பட்டுள்ள புதிய பூட்ஸ் ஜோடியினை வெளியே எடுத்து அதனைப் பிரித்து சாதாரணச் செருப்பாக அதே அளவினில் மாற்றிக் கொடுங்கள். உங்கள் பணியினைத் துரிதப்படுத்தி நான் விரைந்து சென்றடைய தயவு கூர்ந்து விரைந்து செயற்படுங்கள். அளவிறந்த பணிகள் அங்கே தேங்கியுள்ளன" என்றான் பணியாள்.
மார்ட்டீன் கவனம் திரும்பி அவன் கூறிய சொற்களின் முழுமையினைப் புரிந்து கொள்ள சற்று அவகாசம் தேவைப்பட்டது. அதற்குள் உள்ளிருந்து வந்த மார்டினின் வளர்ப்பு மகன் அலங்காரப் பெட்டகத்தினின்றும் ஒரு ஜோடி உரிய புதிய செருப்பை யெடுத்து வந்திருந்தவனிடம் காட்டிக் கொண்டிருக்கும் போதே கைகளினின்றும் அதைப் பறித்துகொண்டு ஓடிப் போக விழைந்தவன் போல் வந்திருந்த பணியாளன் ஏற்கனவே அது ஒரு பணி முடிந்த பொருட்கள் வரிசையில் அடைக்கலம் புகுந்திருந்ததைப் பார்த்து, அது முடிக்கப்பட்டு சில நாட்கள் ஆகிவிட்டன என்பதை எண்ணித் திகைத்தான்.
ஏதும் புரியாத மர்மக் கும்பலுக்குள் சிக்கிக் கொண்டது போன்று ஒவ்வொருவரையும் ஏற இறங்கப் பார்த்ததோடன்றி நீண்ட விடை கூறிவிட்டு அவசர நிமித்தமாய்ப் பறந்தான். நடப்பனவெல்லாம் என்ன? மார்ட்டினின் மனைவியும் வந்து சேர்ந்தாள்.
பூட்ஸை மாற்றித் தைக்க நேரம் பிடிக்கும் என்று வந்தவன் நினைத்திருக்க அதை முன் கூட்டியே செருப்பாய்த் தைத்துப் போட்ட வளர்ப்பு மகனை அச்சத்துடன் நோக்கினான் மார்ட்டீன்.
நடந்த நிகழ்வும் வந்தவன் கூறிய மரணச் செய்தியும், எவ்வித உணர்வும் அற்றவன், எதையுமே புரியமாட்டாதவன் என்று தான் நினைத்திருந்த மூங்கை யார்? அவனால் இத்துணை வசைமொழிகளை எவ்வாறு தாங்கிக் கொள்ள முடிந்தது? அனைத்தும் புரிந்தவனா? இப்பெற்றியுடையவனைத் தரந்தாழ்த்தி விட்டோமா? என்று கழிவிரக்கம் கொண்டு நொந்தான் மார்ட்டீன்.
ஓடிச் டென்று இளைஞனைக் கட்டிப் பிடித்துக்கொண்டு 'ஹோ' வென்று அழுது விம்மினான் மார்ட்டீன். கண்ணீர் சொரிய நின்றுகொண்டிருந்த மார்டீனின் மனைவி மகனின் கைகள் இரண்டையும் பிடித்துக் கொண்டு கதறி அழுதாள். உப்பற்றுக் கொடுத்தாலும் மருக்காது வாங்கி உண்ட அவனின் பெருந்தன்மையை அவள் நினைந்தாள்.
இனிய சங்கீத ஒலியினில் அன்பையும் கனிவையும் இழைத்து ஆதார ஸ்ருதி வருடலைத் தரும் தொனியில் "மார்ட்டீன்" என்று யாரோ கிணற்றுக்குள் இருந்து அழைப்பதுபோன்று ஒரு குரல் கேட்டது.
வெளியே வானம் கருத்து இடியும் மின்னலும் மழையும் மிகுந்து புயற்காற்றின் கடுமையால் சன்னல்திரைகளைக் கிழித்து படபட என்று கதவுகள் அடித்து ஒருவர் பேசுவது பிறருக்குக் கேட்க்காத வண்ணம் இரைச்சல் அதிகரித்தமைால் என்ன நடக்கின்றது என்பது எவரும் அனுமானிக்க முடியாமல் கலப்படமாக பேரிரைச்சல் மட்டுமே நிறைந்திருந்தது.
அத்தனை பேரிரைச்சலுக்கு மத்தியில் ஒரு இனிய சுனாதம் அனைத்து ஒலிகளையும் ஆழத்தின் கீழமுக்கி, வெள்ளத்தில் எதிர் நீச்சல் செய்யும் கருநாகம் போல் துல்லியமாக , ஆனால் மிக கூர்மையான மகுடி நாதம் போன்று சுண்டி இழுத்து மதுரமாய் ஒலித்தது. "அன்புடைய மார்ட்டீன்". குரல் வந்த அறையின் வடகிழக்கு மூலையினில் புதியவன் ஒருவன் நின்றிருந்தான்.
பொன் பஞ்சுப் பொதியலாய் ஒளி உமிழும் தாரகையாய், அன்பின் வடிவாய், அடைக்கலம் தரும் நற்கருணைப் பேராறாய் அவன் வசீகரித்து நின்று கொண்டு இருகை நீட்டி மார்ட்டீனை அழைத்தான். சுயம் அற்றுப் போய் பேரலையில் அல்லாடும் மரக்கட்டையென தள்ளாடி நின்ற மார்ட்டீன் மதுர வாசக அழைப்பின் விசையில் காந்தத்தால் ஈர்க்கப் பட்ட இரும்புத்துண்டு போன்று அவன் முன் கைகட்டி வாய் புதைத்து வணங்கி நின்றான். அவன் பின்புறத்தே அவனது மனைவியும் உள்ளீீடற்றுப் போய் நடைப் பிணமாய் நின்றுகொண்டு உரையாடலைச் செவிமடுத்தாள்.
"என்னை நன்கு பார் மார்ட்டீன். நீங்கள் இருவரும் இறைவனால் ஆசீர்வதிக்கப் பட்டவர்கள்.உங்கள் இருவரிடமும் பயிற்சி பெறும் மாணவனாகச் சில ஆண்டுகள் தங்கிப் பழகித் தவம் புரிந்து கண்டறியாதன கண்டேன்.
நான் கற்றுக்கொண்டவை இயற்கையின் சாரம். அன்புத் தெய்வம் போன்று என்னை ஆதரித்தீர்கள். பயிற்சிமுடிந்தமையின் நான் உங்களைவிட்டு செல்கின்றேன்.எனக்கு விடை கொடுங்கள். உங்கள் வாழ்வு மேலும் சிறக்க நான் இறைவன் அருள் வேண்டிப் பிரார்த்திக்கின்றேன்." என்றான், கருமை நிறம் மறைந்து தெய்வீக ஒளிசூழ நின்றுகொண்டிருந்த அத் தேவதூதன்.
பேரிடராய், மரணவாயிலுக்கு இட்டுச்செல்லும் ஒரு சம்பவம் திசைமாறி கற்பனைக்கும் எட்டாத வகையில் எங்கோ தடம்பதித்துச் செல்வது வேடிக்கையாகவும் புரியாமலுமிருந்தது. மார்ட்டீன் சொன்னான்.
"ஐயா! நீங்கள் பேசுவதெல்லாம் என் சிற்றறிவுக்கு எட்டாத, விளங்காத புதிர்கள். விவரித்துக் கூறினாலும் அறிந்து கொள்ளவியலாதவை. எனக்கு ஒரு சிறுதகவல் மட்டும் சொல்லுங்கள். நீங்கள் யார்? தெய்வீகத் தோற்றம் இப்போது உங்களிடம் வரக்காரணம் யாது? அன்று அனாதையாய் வீழ்ந்துகிடந்த மர்மம் என்ன? ஏழையின் வீட்டில் அரைப்பட்டினியுடன் சில ஆண்டுகள் ஏன் தங்கியிருக்கவேண்டிய தாயிற்று? இங்கு பயிற்சி பெற்றதாகச் சொன்னது என்ன? வறுமையின் பிடியில் சிக்கிய தோல் தொழிலாளியின் அடிமையாய்க் காட்சிதந்து உழன்று என்னையும் அதிரப் பேச வைத்து ஒன்றுமே அறியாத ஊமையாய் நடந்த நாடகத்தில் கண்ட முடிவென்ன? "
நெகிழ்வான உண்மை உரிமையுடன் மாட்டீனின் கேள்விகளுக்கு மனமுவந்து அத் தேவ தூதன் கடமையாய்க் கொண்டு பதிலிறுத்தான். "எனதருமை மார்ட்டீன்! நான் விரைந்து சென்று இறைவன் பால் என் வணக்கத்தைத் தெரிவித்து என்பணியினைத் தொடர வேண்டும். என்றாலும் உண்மையின் தேடலாய் களங்கமற்ற உங்கள் ஐயங்களைத் தவிர்ப்பது என்கடமையாகும்" சற்று நிறுத்தி மீண்டும் அவன் சொன்னான்.
" அன்று வந்த இரட்டையர் சிறுமிகள் நினைவிருக்கிற தன்றோ? அக்குழந்தைகளின் தாயின் உயிர் பிரியவேண்டிய அன்னாளில் அவள் மரணத்துடன் போராடித் தவித்தாள். அவள் படும் அவஸ்தைகளை நேரில் பார்த்து உயிரைக் கவர்ந்து செல்ல வந்த நான் புதியதாய்ப் பிறந்த இரட்டைக்குழவிகள் தனிமைப்பட்டு இவ்வுலகில் அழிந்து போகும் என்று கருதி கருணை காட்டித் தாயின் உயிரைச் சிலகாலம் விட்டுவைக் கலாகுமா வென்று வேண்டுகோளை இறைவனனின்முன் வைத்தேன். அதற்கு இறைவன் திட்டமிட்டபடி வேறு ஒரு தூதனை அனுப்பி அத்தாயின் உயிரை எடுத்து வரச்செய்துடன் என்னைச் சபித்து," நீ பூவுலகில் சிலகாலம் தங்கி, உலகம் எதனால் நிலைபெற்றிருக்கின்றது? மனிதர்களுக்கு என்ன கொடுக்கப்பட்டிருக்கின்றது? என்ன கொடுக்கப்படவில்லை? என்பதை அறிந்துகொண்டு வந்துசேர்வாயாக என்று கூறவும் தெய்வீக ஆற்றல் குறைந்து நான் மாதாகோயில் முற்றத்தில் வீழ்ந்தேன்."
தேவதூதன் மேலும் தொடர்ந்தான்," கருணையோடு உன் மனைவி எனக்கு அன்று ஓட்ஸ் கஞ்சி தரும்போது என் நண்பன் உடன் நின்று கொண்டிருந்தான்.அவன் முகம் பார்த்து முறுவலித்தேன். அன்றையத் தேர்வில் அவள் கண்டம் தப்பித்தாள். அக்கருணை பிறக்கவில்லையெனின் அவளின் உயிர் அன்று பறிபோயிருக்கும்."
"குழந்தைகட்குக் காலணிதைக்கவந்த சீமாட்டி தாயினு மேலாக அக்குழந்தைகளை ஆதரித்து அன்புகாட்டிச் செல்வச் சிறப்புடன் பராமரித்து வருகிறாள் என்பதை இறைவன் எனக்குக் காட்டியருளினார். அத்தாய் பிழைத்திருந்தால் அச்சிறுமிகள் வறுமையிலேயேதான் வாடியிருப்பார்கள்."
"உலகையே விலை பேசும் செல்வப்பிரமுகரின் கோச்சிலேயே நண்பன் வரக்கண்டேன். சற்று நேரத்தில் உயிர் பிரியும் தன்மை நெருங்கிவந்துள்ளமை அறியாத அவர் வேட்டைப் பிராணியின் நிலையையும் பூட்ஸ் விரும்புவதையும் ஆரவாரமாகத்தெரிவித்து வாங்கிச் செல்லக் கெடுவைத்துப் பேசினார். அவர் இறக்கும்போது அவருக்கு பூட்ஸ் அணிவித்து நல்லடக்கம் செய்யப் போவதில்லை. அவர் விருப்பத்திற்கு மாறாக செருப்பு மட்டுமே வழக்கமுறைமைப்படி தேவை யென்பதால் செருப்பைத் தைத்துப் போட்டேன்."
"உலகம் அன்பினால் நிலை பெற்றிருக்கின்றது என்பதையும், அன்புகூர்ந்து பிறருக்குத் தொண்டு புரியும் தன்மை மக்களுக்குக் கொடுக்கப்பட்ட செல்வம் என்பதையும், மரணம் என்று எப்படி சம்பவிக்குமென்று அறிய முடியாதவாறு இறைவனால் மறைக்கப்பட்டிருக்கின்றது என்பதையும் உங்களுடன் வசிக்கும் போது நான் அறிந்து கொண்ட பாடம்" என்று கூறிவிட்டு விடைபெற்றுச் சென்றான் தேவதூதன்.
Sunday, December 12, 2010
கொக்கிற்கு எத்தனை கால்
பண்ணையார் பரந்தாமன் அன்று வேட்டைக்குச் சென்று திரும்பினார். அவர் கையில் கொக்கு ஒன்று இருந்தது. தன் கையிலிருந்த கொக்கைச் சமையல்காரனிடம் தந்தார்.
"இன்று இரவு உணவிற்கு இதை அருமையாகச் சமைத்து வை. என் நண்பர்கள் சாப்பிட வருகிறார்கள்,'' என்று சொல்லிவிட்டு வெளியே சென்றார்.
சமையல்காரன் அந்தக் கொக்கை உரித்து மசாலா போட்டுக் குழம்பு வைத்தான். கறிக் குழம்பின் மணம் அவன் மூக்கைத் துளைத்தது. ஆசையை அடக்க முடியாது அவன் கொக்கின் ஒரு காலை எடுத்து சாப்பிட்டு விட்டான்.
"முதலாளி கேட்கமாட்டார். கேட்டாலும் சமாளித்துக் கொள்ளலாம்" என்று நினைத்தான் அவன்.
சாப்பாட்டு நேரம்—
முதலாளியும் அவர் நண்பர்கள் சிலரும் சாப்பிட அமர்ந்தனர். கறிக்குழம்பு பரிமாறப்பட்டது. கொக்கின் ஒரு காலைச் சுவைத்து உண்ட அவர், ""மிக நன்றாக உள்ளது. இன்னொரு காலை கொண்டு வா,'' என்று கேட்டார்.
திகைத்த சமையல்காரனுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. "கொக்கிற்கு ஒரு கால் தான் முதலாளி. எப்படி இன்னொரு காலைக் கொண்டு வர முடியும்?'' என்று கேட்டான்.
நண்பர்கள் எதிரில் சமையல்காரனோடு வாதிட விரும்பாத முதலாளி, "ம்ம்ம்... நாளைக் காலையில் கொக்கிற்கு ஒரு காலா இரண்டு காலா என்று தெரிந்து கொள்ளலாம்,'' என்று சொல்லிவிட்டு அந்தப் பிரச்னையை அதோடு விட்டு விட்டார்.
மறுநாள் பொழுது விடிந்தது. சமையல்காரனை அழைத்துக் கொண்டு முதலாளி வேட்டைக்குப் புறப்பட்டார். போகும் வழியில் வயல் வெளியில் ஏராளமான கொக்குகள் நின்றிருந்தன. "கொக்கிற்கு ஒரு காலா? இரண்டு காலா? இப்பொழுது சொல்,'' என்று கேட்டார் முதலாளி.
"ஐயா! அதோ பாருங்கள். எல்லாக் கொக்குகளும் ஒரே காலில்தான் நின்று கொண்டுள்ளன. ஆகவே, கொக்கிற்கு ஒரு கால் தான் முதலாளி,'' என்றான் சமையல்காரன்.
முதலாளி, கொக்குக் கூட்டத்தை பார்த்து "ச்சூ' என்று கூச்சல் போட்டு விரட்டினார்.
ஒரு காலில் நின்று கொண்டிருந்த கொக்குகள் அனைத்தும் இரண்டு கால்களையும் தரையில் ஊன்றி எழுந்தபடி சிறிது துõரம் தாவிப் பின் பறந்து சென்றன.
"இப்பொழுது என்ன சொல்கிறாய்? கொக்கிற்கு ஒரு காலா? இரண்டு காலா?'' என்று மறுபடியும் கேட்டார் பண்ணையார்.
"ஐயா! நீங்கள் சாப்பிடும் போது இப்படிச் "ச்சூ' என்று சத்தம் போட்டிருந்தால் அந்தக் கொக்கிற்கும் இன்னொரு கால் வந்திருக்குமே!'' என்று சாமர்த்தியமாகச் சொன்னான் சமையல்காரன்.
அவனுடைய கெட்டிக்காரத்தனமான பேச்சைக் கேட்டு மகிழ்ந்த அவர், "இனி இப்படி நடந்து கொள்ளாதே... பொய் சொல்வது, ஏமாற்றுவது எனக்கு பிடிக்காத குணம். உனக்கு என்ன வேணுமோ அதை கேட்டு வாங்கிச் சாப்பிடு,'' என்றார் முதலாளி.
"என்னை மன்னிச்சிடுங்க முதலாளி... இனிமேல் இப்படிச் செய்யமாட்டேன்!'' என்றான் சமையல்காரன்.
"இன்று இரவு உணவிற்கு இதை அருமையாகச் சமைத்து வை. என் நண்பர்கள் சாப்பிட வருகிறார்கள்,'' என்று சொல்லிவிட்டு வெளியே சென்றார்.
சமையல்காரன் அந்தக் கொக்கை உரித்து மசாலா போட்டுக் குழம்பு வைத்தான். கறிக் குழம்பின் மணம் அவன் மூக்கைத் துளைத்தது. ஆசையை அடக்க முடியாது அவன் கொக்கின் ஒரு காலை எடுத்து சாப்பிட்டு விட்டான்.
"முதலாளி கேட்கமாட்டார். கேட்டாலும் சமாளித்துக் கொள்ளலாம்" என்று நினைத்தான் அவன்.
சாப்பாட்டு நேரம்—
முதலாளியும் அவர் நண்பர்கள் சிலரும் சாப்பிட அமர்ந்தனர். கறிக்குழம்பு பரிமாறப்பட்டது. கொக்கின் ஒரு காலைச் சுவைத்து உண்ட அவர், ""மிக நன்றாக உள்ளது. இன்னொரு காலை கொண்டு வா,'' என்று கேட்டார்.
திகைத்த சமையல்காரனுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. "கொக்கிற்கு ஒரு கால் தான் முதலாளி. எப்படி இன்னொரு காலைக் கொண்டு வர முடியும்?'' என்று கேட்டான்.
நண்பர்கள் எதிரில் சமையல்காரனோடு வாதிட விரும்பாத முதலாளி, "ம்ம்ம்... நாளைக் காலையில் கொக்கிற்கு ஒரு காலா இரண்டு காலா என்று தெரிந்து கொள்ளலாம்,'' என்று சொல்லிவிட்டு அந்தப் பிரச்னையை அதோடு விட்டு விட்டார்.
மறுநாள் பொழுது விடிந்தது. சமையல்காரனை அழைத்துக் கொண்டு முதலாளி வேட்டைக்குப் புறப்பட்டார். போகும் வழியில் வயல் வெளியில் ஏராளமான கொக்குகள் நின்றிருந்தன. "கொக்கிற்கு ஒரு காலா? இரண்டு காலா? இப்பொழுது சொல்,'' என்று கேட்டார் முதலாளி.
"ஐயா! அதோ பாருங்கள். எல்லாக் கொக்குகளும் ஒரே காலில்தான் நின்று கொண்டுள்ளன. ஆகவே, கொக்கிற்கு ஒரு கால் தான் முதலாளி,'' என்றான் சமையல்காரன்.
முதலாளி, கொக்குக் கூட்டத்தை பார்த்து "ச்சூ' என்று கூச்சல் போட்டு விரட்டினார்.
ஒரு காலில் நின்று கொண்டிருந்த கொக்குகள் அனைத்தும் இரண்டு கால்களையும் தரையில் ஊன்றி எழுந்தபடி சிறிது துõரம் தாவிப் பின் பறந்து சென்றன.
"இப்பொழுது என்ன சொல்கிறாய்? கொக்கிற்கு ஒரு காலா? இரண்டு காலா?'' என்று மறுபடியும் கேட்டார் பண்ணையார்.
"ஐயா! நீங்கள் சாப்பிடும் போது இப்படிச் "ச்சூ' என்று சத்தம் போட்டிருந்தால் அந்தக் கொக்கிற்கும் இன்னொரு கால் வந்திருக்குமே!'' என்று சாமர்த்தியமாகச் சொன்னான் சமையல்காரன்.
அவனுடைய கெட்டிக்காரத்தனமான பேச்சைக் கேட்டு மகிழ்ந்த அவர், "இனி இப்படி நடந்து கொள்ளாதே... பொய் சொல்வது, ஏமாற்றுவது எனக்கு பிடிக்காத குணம். உனக்கு என்ன வேணுமோ அதை கேட்டு வாங்கிச் சாப்பிடு,'' என்றார் முதலாளி.
"என்னை மன்னிச்சிடுங்க முதலாளி... இனிமேல் இப்படிச் செய்யமாட்டேன்!'' என்றான் சமையல்காரன்.
Subscribe to:
Posts (Atom)