ஒரு காட்டில் காளைமாடு, சேவல், பன்றி, பூனை ,செம்மறியாடு ஆகிய ஐந்தும் ஒன்றாக வீடு கட்டி வாழ்ந்து வந்தன. இவைகள் ஒன்றுக்குகொன்று ஒற்றுமையாக இருந்தன. அந்தக் காட்டில் இருந்த நரி சேவலைப் பிடித்துத்தின்ன நீண்ட நாற்களாக திட்டமிட்டு வந்தது. அதே காட்டில் ஓர் ஓநாயும் இருந்தது. ஓநாயுக்கு செம்மறி ஆட்டைப் பிடித்துத் தின்னும் ஆசை இருந்தது.
ஒரு நாள் ஓநாயும் நரியும் சந்தித்தன.இருவரும் தமது விருப்பங்களை ஒருவருக்கு ஒருவர் தெரிவித்தனர். சமயம் பார்த்து ஓநாயும் நரியும் கரடியொன்றைக் கூட அழைத்துக் கொண்டு , காளைமாடு,சேவல். பன்றி, பூனை. செம்மறியாடு போன்றவை வசிக்கும் வீட்டுக்கு புறப்பட்டன. வீட்டிற்க்கு அருகில் வந்ததும் நரி ஓநாயையும் கரடியையும் பார்த்து நான் முதலில் உள்ளே போகிறேன், போய் சேவயைப் பிடித்தவுடன் குரல் கொடுப்பேன் நீங்கள் ஒவ்வருவராக உள்ளே வாருங்கள் என்றது ஓநாயும் கரடியும் அதற்க்கு சம்மதித்து வெளியே காத்திருக்க நரி உள்ளே சென்றது.
இவற்றைலெல்லாம் வீட்டின் மேல்புறத்தில் அமர்ந்திருந்த சேவல் அவதானித்தது. இதையெல்லாம் நண்பர்களிடம் சொல்லி எச்சரித்தது. கதவை திறந்து கொண்டு நரி உள்ளே போனபோது காளைமாடு வந்து முட்டித்தள்ளியது நரி நிலை குலைந்து கீழே விழ பூனையும் சேவலும் நரியைத் தாக்கத்தொடங்கின. வெளியே காத்திருந்த ஓநாய் கரடியைப் பார்த்து உள்ளே போன நரி சேவலைத்தின்று மயங்கிக்கிடக்கிறது போலும் நான் உள்ளே போய் பார்த்துவிட்டு வருகிறேன் என்று உள்ளே போனது.
ஓநாய் உள்ளே நுழைந்தது தான் தாமதம் காளை மாடு அதை மோதித்தள்ளியது. ஓநாய் கீழே விழுந்தது பன்றியும் செம்மறியாடும் ஓநாயின் மேல் ஏறித்தாக்கின. வெளியே காத்திருந்த கரடி பொறுமை இழந்தது.இருவரும் உள்ளே என்ன? செய்கிறார்கள் என்று நினைத்தபடி கடகடவென உள்ளே வந்தது.வாசலுக்கு வந்ததுதான் தாமதம் காளைமாடு சற்றுப் பின்னே போய் ஒரே பாச்சலாக வந்து மோதியது. கரடி ஒவெனக் கத்தியபடி தூரத்தில் போய் விழுந்தது.
வீட்டுக்குள் அகப்பட்ட ஓநாயும் நரியும் எப்படியோ வெளியே வந்து தப்பினோம் பிழத்தோம் என்று ஒரேஓட்டமாக ஓடித்தப்பின. காளைமாடு, சேவல், பன்றி, பூனை ,செம்மறியாடு எல்லாம் ஒன்றாக ஒற்றுமையாக இருந்தபடியால் தங்களைக் கொல்லாவந்த எதிரிகளை அடித்துத்துரத்திவிட்டன.
நாம் எந்தக் காரியத்தையும் ஒற்றுமையுடன் செய்வேமாயின் எம்மை வெல்ல இவ்வுலகில் யாருமில்லை. நாம் ஒன்றுபடுவோம்.
No comments:
Post a Comment