Tuesday, January 4, 2011

அறியாமல் இருக்கும் வரை

ஒரு  நாள் சாரு எனும் இளைஞன் தனது வீட்டிற்குமுன்னால் உள்ள வேப்பமரத்தின் கீழே உட்கார்ந்திருந்தான். அவன் சோகமாக உட்க்கார்ந்திருப்பதைக் கண்ட வேப்பமரம் அவனிடம், "ஏன் தம்பி சோகமாயிருக்கிறாய்?" என்று கேட்டது.

இதைக் கேட்ட சாரு வேப்பமரத்திடம் "என்  அப்பாவும் அம்மாவும் என்னை எப்போதும் படி படி என்று படாதபாடாய் படுத்துகின்றார்கள், அது  மட்டுமின்றி கண்டபடி என்னை ஊர் சுத்தக்கூடாது என்றும் சொல்கிறார்கள். நான் இந்த வயதில் நண்பர்களுடன்  கூடிவிளையாடிசந்தோசமாக இல்லாமல் .எப்போது சந்தோசமாக இருப்பது? என் நண்பர்கள் எல்லோரும் தினமும் பூங்கா, சினிமா என்று எவ்வளவு சுதந்திரமாக இருக்கிறார்கள் தெரியுமா? எனக்குத்தான் எந்த சுதந்திரமும் இல்லை!" என்று கலங்கியபடி சொன்னான்.

இதைக் கேட்டதும், "ஓ… சாரு இதுதான் உன் பிரச்சனையா? நான் ஒரு கருத்தைச் சொல்கிறேன் கேள்" என்ற வேப்பமரம், "நான் வேப்பமரம் தானே…?" என்றது "ஆம். அதற்கென்ன இப்போ?" என்றான் சாரு.

"என் பாகங்கள் எல்லாம் எப்படி இருக்கும்?" என்றது வேப்பமரம்.

"கசப்பாக இருக்கும்!" என்றான் சாரு.

"சரி என் உறுப்புக்கள் கசப்பாக இருக்கும் ஆனால் என்னை மருந்தாகப் பயன்படுத்திப் பலர் சாப்பிடுகிறார்கள் அல்லவா?அதையே தொடர்ந்து உண்டு வந்தால் நான் நோய்களைக் குணப்படுத்த்தி விடுவேன்.
 நான் கசப்பாக இருந்தாலும் என்னால் பலன் தான் கிடைக்குமே தவிர, தீமை ஒன்றும் ஏற்படாது. அது போலத்தான் பெற்றோர்கள் உங்களுக்குச் சொல்லும் அறிவுரைகள் உங்களுக்குப் பிடிக்காமல் இருக்கும்.ஆனால் அவர்கலின் அறிவுரைகளைப் பின்பற்றி வந்தால் நீங்கள் முன்னேறலாம்.
உன் பெற்றோர்கள் உன்னைக் கண்டபடி ஊர் சுற்றாமல் கவனமாய் படிக்கச் சொல்வது உன் முன்னேற்றத்திற்காகத் தானே" என்று கூறியது வேப்பமரம்.

இதைக் கேட்டசாரு வேப்பமரம் கூறுவது நூற்றுக்கு நூறு சரி. உண்மைகள் கசப்பாகத்தான் இருக்கும் என்பதை உணர்ந்தான். புத்தி தெளிவுடன்  வேப்பமரத்திற்கு நன்றி சொல்லிவிட்டு பாடங்களைப் படிப்பதற்காக வீட்டிற்க்குச் சென்றான் சாரு.

No comments:

Post a Comment