பிள்ளையுடன் விளையாடியபின் குழந்தையுடன் வீட்டிற்குப் புறப்பட்டார்கள்.இவற்றைலெல்லாம் அந்தக் கடற்கரையில் இருக்கும் சிறிய நண்டு ஒன்று கவனித்துக் கொண்டிருந்தது. அவர்கள்கடற்கரையை விட்டுப்போனதும் சிறிய நண்டு நேராகத் தன் தாயிடம் சென்றது அது தாயிடம், "அம்மா!எமது இருப்பிடத்திற்கு ஒரு தாயும் தந்தையும் தமது குழந்தையைக் கூட்டிக்கொண்டு வந்தார்கள் அந்தக் குழந்தை நடந்து விளையாடியதைப் பார்த்து அவர்கள் குதூகலித்தார்கள். ஆனால்,அந்தக் குழந்தைக்குச் சரியாக நடக்கத் தெரியவில்லை அக் குழந்தை சாய்ந்து சாய்ந்துதான் நடந்தது. குழந்தை நேராக நடந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் அல்லவா?" என்று கேட்டது.
இதைக் கேட்ட தாய் நண்டுக்குச் சிரிப்பு வந்தது,மகனே! எனக்கு முன்னால் நேராக ஒரு முறை நடந்து காட்டு பார்க்கலாம்!என்று சென்னது தாய் நண்டு.உடனே சிறிய நண்டு தாய் நண்டுக்கு முன்னால் நடந்து காட்டியது.ஆனால் நேராக நடக்காமல்.ஒரு பக்கம் இழுத்தாற்போல் இருந்தது சிறிய நண்டின் நடை.
இதைப் பார்த்த தாய் நண்டு "நீயும் ஒரு பக்கம் சாய்ந்துகொண்டுதானே நடக்கிறாய்?" என்று சொன்னது. சிறிய நண்டு மறுபடியும் நடந்து காட்டியது ஆனால் எவ்வளவோ முயன்றும் அதனால் நேராக நடக்கமுடியவில்லை. "நீ எப்படி நடக்கிறாய் என்று தெரியாமல் மற்றவரின் நடையில் குற்றம் கண்டுபிடிக்கிறாய். முதலில் உன்நடையைத் திருத்திக்கொண்டு.மற்றவர்களைப் பார்க்கவேண்டும்!" என்று அறிவுரை சொன்னது தாய் நண்டு. சிறிய நண்டு தாயின் அறிவுரையை அமைதியாகக் கேட்டது.
No comments:
Post a Comment