ஒரு காட்டில் வேடன் ஒருவன் விரித்த வலை ஒன்றில் புறா ஒன்று சிக்கிக்கொண்டது. வேடன் வருவதற்கு முன் வலையில் இருந்து விடுபட்டுச் சென்று விடவேண்டும்.என்று எண்ணி சிறகுகளைப் படபபவென்று அடிக்க. அதுவலையில் வசமாகமாட்டிக்கொண்டது.
புறாவால் இப்போது சிறகுகளை அசைக்க முடியாமல் போய்விட்டது. வலை விரித்த வேடன் சிறிது நேரத்தின் பின்னர் அவ் விடத்துக்கு வந்தான்.தான் விரித்த வலையில் புறா ஒன்று சிக்கியிருப்பதைக் கண்டு மகிழ்ந்தான்.
வலையின் அருகேவந்த வேடன் புறாவை வலையில் இருந்து விடுவித்து.புறாவை கையில் இறுக்கிப்பிடித்தான்.அப்போதுபுறா வேடனைப் பார்த்து தயவு செய்து என்னை ஒன்றும் செய்யாமல் விட்டுவிடு. என்னை நீ விட்டுவிட்டால் நீ செய்த உதவியை நான் ஒருபோதும் மறக்கமாட்டேன்! என்று கெஞ்சியது.
வேடனோ, "என் மனதில் உன் இறைச்சியின் சுவைதான் நிறைந்திருக்கிறது. நான் உன்னை விட்டுவிட்டால் நீ என்னை மறக்கமாட்டேன் என்று சொன்னாய். அதனல் எனக்கு என்ன இலாபம்? எனவே பேசாமல் இரு!" என்று அதட்டினான் வேடன்.
உடனே புறா "அப்படியானால் உனக்கு ஏதாவது இலாபம் இருந்தால் என்னை விட்டு விடுவாயா?" என்று கேட்டது.
"எதாவது இலாபம் கிடைக்குமானால் உன்னை விடுவது பற்றி யோசனை செய்யலாம். என்ன இலாபம் என்று முதலில் சொல்!" என்று கேட்டான் வேடன்.
"இப்போது உனக்கு நான் ஒரு புறா மட்டும் தானே கிடைத்திருக்கிறேன்? நீ மட்டும் என்னை விட்டு விட்டால்,ஒரு புறாக் கூட்டத்தையே உன் வலையில் விழச் செய்வேன்!" என்று கூறியது புறா.
"எப்படி?" என்று கேட்டான் வேடன்.
வேடனும் தன்னை விடுவிக்கப் பேகிறான் என்ற மகிழ்ச்சியில், "நீ என்னை விடுவித்தால் நான் பறந்து சென்று என்னுடைய நண்பர்களிடம் நயமாகப் பேசி, இங்கு அழைத்து வந்து உன் வலையில் விழ வைப்பேன்" என்று சொன்னது புறா.
"புறாவே! நீ சொல்லும் உபாயம் எனக்கு இலாபம் தான் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.ஆனாலும் நான் உன்னைவிடவேமாட்டேன்" என்றான் வேடன்.
"ஏன் என்னைவிடுவித்தால் உனக்கு லாபம்தானே?" என்று கேட்டது புறா.
"உன் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, நீ உன் நண்பர்களைக் கொலையிட நினைக்கின்றாய் உனக்கு உயிர் வாழ்வதற்கு அருகதை
இல்லை. எனவே நான் உன்னை விட மாட்டேன்" என்று கூறி
புறாவை தன் வீட்டிற்கு எடுத்துச் சென்றான் வேடன்.
No comments:
Post a Comment