பள்ளித் தலைமை ஆசிரியர் சுந்தரமூர்த்திக்கு ஒரு பிரமாதமான யோசனை தோன்றியது. அவருடைய பள்ளி பிரதான தெருவில் தான் இருந்தது. பள்ளி தொடங்கி ஐம்பது ஆண்டுகள் ஆனதைக் கொண்டாட ஊரார் ஒத்துழைப்புடன் ஒரு விழாவிற்கு ஏற்பாடு செய்தார். கல்வி மந்திரியை அழைத்து விழாவை சிறப்பாக நடத்தித் தர ஏற்பாடு செய்தார்கள்.
ஆச்சரியம்!
அத்தனை நாட்களும் கவனிப்பாரற்று இருந்த சாலை சீரமைப்புப் பணி போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு, சீக்கிரமே முடிவடைந்தது. அலங்கோலமாக இருந்த தெரு ஒரு புத்தப்புது தார் ரோடாக மாறியது! பொது மக்களுக்கோ மட்டற்ற மகிழ்ச்சி!
No comments:
Post a Comment