பல பறவைகள் தேர்தலில்மிக மும்மரமாக இறங்கிப் போட்டியிட்டன. ஒவ்வொரு பறவையும் தத்தமது அருமை பெருமைகளையும் வீரத்தையும் எடுத்துக்காட்டி தம்மை தலைவனாக்கும்படி கேட்டுக் கொண்டன ,
கடைசியாக மயில் எழுந்து காரசாரமாகப் பேசியதுடன். தனது அழகிய தோகையை விரித்து நடனமும் ஆடியது.
ஒரு வழியாகத் தேர்தல் முடிந்தது. மயிலின் அழகான தோற்றத்தையும்,அதன் நடனத்தையம் இரசித்த பறவைகள் மயிலைத் தலைவனாகத் தேர்ந்தெடுத்தன.
மயில் பறவைகளின் தலைவனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை பறவைகள் எல்லாம் மகிழ்ச்சியுடன் கூடிக் கொண்டாடின.
அப்போது குருவி ஒன்று எழுந்து பறவைகளைப் பார்த்து.
சபையோர்களே! மயிலார் நம் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார். நம்மை ஆளும் பொறுப்பு இனி அவருடையது. இனி நம்மை எல்லாம் காப்பவர் அவர்தான்.
நமது எதிரியான கழுகு ,பருந்து,ராஜாளி போன்றவை நம்மோடு சண்டையிட வந்தால் நம்மை மயிலார்தான் காப்பாற்றுவார். நாம் நம் எதிரிகளிடமிருந்து எவ்வாறு தப்பிக்கொள்வது என்பது பற்றி மயிலார் கூறுவார்! என்று கூறிவிட்டு அமர்ந்தது.
குருவியின் பேச்சைக் கேட்டு மற்றப்பறவைகள் கைதட்டின. தலைவனாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மயில் நல்ல கருத்தை வெளியிடும் என்று ஆவலோடு பறவைகள் எதிர் பார்த்தன.
ஆனால் மயில் எதுவும் பேசாமல் மெளனமாக இருந்தது.
இதைப் பார்த்த பறவைகள்,மயிலின் அழகையும் அதன் நடனத்தையும் பார்த்து அதைத் தலைவனாகத் தேர்ந்தெடுத்து விட்டோம். மயில் நடனமாடச் சொன்னால், அழகாக நடனமாடும். எதிரிகளிடமிருந்து இதன் அழகும் நடனத்திறமையும் நம்மைக் காப்பற்றுமா? என்று தமது மடத்தனத்தை எண்ணிநொந்து கொண்டன.
தம்மை ஆழ்வதற்குத் தகுதியானவர்.எதிரிகளிடமிருந்து காப்பாற்றக்கூடிய வீரமும் விவேகமும் உடையவராக இருக்க வேண்டும்.என்பதை அந்தப் பறவைகள் பின்னர் தான் புரிந்து கொண்டன.
No comments:
Post a Comment